Tuesday 29 March 2016

தோற்க்கடிக்கப்பட்ட பரிணாம வளர்ச்சி ......

No comments:
தோற்க்கடிக்கப்பட்ட பரிணாம வளர்ச்சி ......

பரிணாமவியல் கோட்பாட்டை முதலில் வைத்தது டார்வின்
உலகத்திலையே நிரூபிக்க படாத விஞ்ஞானத்தை பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றுவரை போதிக்கபடுகிறது என்றால் 
அது இந்த பொய்யான கோட்பாடு தான் ..

டார்வின் கோட்பாட்டை டார்விணிசம் என்று அழைத்தாலும் அது நிரூபிக்க படாத விஞ்ஞானம் தான்.

இதை தமிழில் இயற்கை தேர்வு கொள்கை என்று அழைகிறார்கள்.
டார்வின் கோட்பாடு எனபது என்னதெரியுமா ?

உலகில் மனிதன் முதன் முதலில் மனிதனாக உருவாகவில்லை
ஏற்கனவே ஒரு பிராணியாக இருந்து இன்று பரிணாமம் பெற்று பிரானியில் இருந்து மனிதனாக முன்னேறி இருக்கிறான்எனபது தான்.
அந்த கோட்பாடு ஆமா அந்த மனிதனின்
முன்னோடி பிராணி எது ?
ஆப்பிரிக்கா வகை வாலில்லா குரங்கு ..

இது தான் மனிதனின் முன்னோடி என்று அவர் சொன்னார் .
டார்வின் இந்த உளறலை கொண்டுவந்தாலும்
அதை உயிரோட்டமாக உலகில் பிரசாரம் செய்தது
ஜீன் பேட்டிஸ் லாமார்க் .என்பவர்

இவரின் உளறலில் ஒன்று தான் ஒட்டகச்சிவிங்கி .
உணவிற்காக கழுத்தை நீட்டி நீட்டி அதற்க்கு கழுத்து நீண்டுவிட்டது என்று இந்த ஜீன் குறிபிட்டுள்ளார்

இப்பொழுது இந்த ஜீனோ அல்லது டார்வினோ உயிரோடு இல்லைஎன்றாலும் அவரின் பொய்யான ஆய்வை தூக்கி கொண்டு சிலர் வாதிப்பது வேதனையாக உள்ளது ...

கேட்டால் நீங்கள் முகம்மது என்ற மனிதரை தான் பின்பற்றுகிறீர்கள் உங்களுகென்ற இயற்கையாக[!] உருவான
மூளையை பின்பற்றுங்கள் சிந்தியுங்கள்
என்று நமக்கு அறிவுரை வேறு சொல்லுகிறார்கள்

ஆனால் அந்த நண்பர்கள் மறந்த விஷயம் டார்வின் என்ற மனிதரை தான் இவர்களும் பின்பற்றுகிறார்கள்

அவர் உலகில் சொன்ன பரிணாமவியல் கோட்பாட்டை தானே இவர்களும் வாந்தி எடுக்கிறார்கள் அவர்களுகென்று பிரத்யேகமாக
உதித்த விஷயமா இது ??

ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினமாக பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தவன் தான் மனிதன் என்று சொல்லும் நீங்கள்
ஏற்கனவே இருந்த உயிரினம் என்ன பிராணியாக இருந்தது என்று
சொல்லவில்லையே ஏன் ?

ஒட்டகச்சிவிங்கி உணவுக்காக கழுத்தை நீட்டி நீட்டி அதற்க்கு கழுத்து நீண்டது என்றால்
குதிரைகள் என்ன பாவம் செய்தது ?

அவைகளும் பிராணிகள் தானே
அல்லது ஒட்டகச்சிவிங்கி வாழும் காலத்தில்
குதிரைகள் இல்லையா என்ன ?

அப்படி பார்க்கபோனால் ஒட்டகசிவிங்கியவை விட
குதிரைகள் தான் உலகில் அதிகமாக உள்ளது
ஏன் ஒட்டகச்சிவிங்கிகள் குறைந்தது ?

உங்கள் பார்வையில் உணவிற்காக கழுத்தை நீண்ட ஒட்டகசிவிகிகள்
அதிகமாக இருக்க வேண்டும் குதிரைகள் தான் அது காலபோக்கில் உணவு கிடைக்காமை குறைந்து இருக்கவேண்டும் .

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் குரங்கில் இருந்து வந்ததாக சொல்லப்படும் இவர்கள் இன்று அந்த குரங்குகள் இருகின்றனவே ...
அப்படிஎன்றால் மனித தன்மை முழுமை
அடையவில்லையோ ?

சரி பரிணாம வளர்ச்சி பெற்ற உயிரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது என்றால் குரங்கின் முன்னோடி பிராணி எது சொல்ல முடியுமா ?

அதுகூட பரவாயில்லை மனிதன் இன்னும் பல கோடி ஆண்டு கழித்து என்ன மாதிரி மாறுவான் .
பரிணாமவியல் பரிணாமம் பெற்றுகொண்டே தானே
 இருக்கவேண்டும் அப்படிஎன்றால் மனிதன் என்னவாக மாறுவான்....
இல்லை இது தான் இறுதி என்றால் மனிதன் தான் பரிணாமவியலின் இறுதி முடிவு என்று எதை வைத்து சொல்கிறீர்கள் ?

உயிர் இல்லாத பொருளான மண் பாறைகள் வாயுக்கள் காற்று மழை மற்றும் மின்னல் இவைகளின் விளைவாக தான் இந்த உலகின் முதல் உயிரினம் தோன்றியதாம்
இப்படி பரிணாம பெற்று இன்று மனிதர்களாக இருக்கிறோம் என்கிறார்கள் அப்படியாயின் இன்று உள்ள காற்று மண் மழை எப்பொழுது பரிணாமம் அடையும் ??

இப்படி எவ்வளவோ கேள்விகள் உண்டு டார்வின் கோட்பாட்டை மேடை போட்டு பிரசாரம் செய்யும் நண்பர்கள் இதற்க்கு பதில் சொல்லவேண்டும் ...

அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னதெரியுமா ?
வைஸ்மன் என்ற வரலாற்று ஆய்வாளர் இந்த டார்வின் ,
ஜீன் ஆகியோரின் உளறல்களை எலிகள் மூலம் சோதித்து பார்த்து இது பொய்யென்று நிருபித்த சம்பவம் உண்டு ..

இதை கடுமையாக மறுத்த வரலாற்று அறிஞர்கள் பலர் உண்டு அதில் முக்கியமானவர் ஸ்பென்சர் வேல்ஸ் டார்வின் கொள்கை தவறானது என்று பிரசாரம் செய்தது மட்டுமல்லாது அதை நிரூபிக்கவும் செய்தார்
அவர் தான் பல வருட ஆய்வுக்கு பிறகு கண்டு பிடித்த
உண்மை என்ன தெரியுமா ????

இந்த உலகில் வாழும் அத்துணை மக்களும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் தான் .
உயிரியல் துரையின் விஞ்ஞானியான இவர் சொன்னார் எந்த ஒரு மனிதனின் மரபணுவையும் எடுத்து சோதித்தால் அந்த மரபணுவின் ஆரம்பம் ஆப்பிரிக்கா தாய்க்கும் தந்தைக்கும்
தான் போய் முடியும் என்றார்

மனித குலத்தின் மூதையர்கள் முன்னோடிகள் ஆப்பரிக்க பகுதியில் தான் வாழ்ந்தார்கள் ,அங்குள்ள வறண்ட பாலைவனங்களின் காரணமாகவும் உணவு தேவைக்காகவும் நடக்க ஆரம்பித்த
ஆதி மனிதர்கள் பல்கி பெருகி நாடுவாரியாக வாழ்ந்துள்ளார்கள்.

நாட்கள் செல்ல செல்ல அங்கு உள்ள வானிலை பிரதேசம் அடிப்படையில் ஒவ்வொருவரும் தனித்தன்மை
தாங்கி வேறுபட்டு உள்ளார்கள்
இப்படி உருவானது தான் மனித இனம் ஒரு தாய் தந்தைக்கு ஆப்பிரிக்கா முன்னோர்கள் வழியில் பிறந்தவர்கள் தான் நாம் அனைவரும்
.என்ற கருத்தை உலகில் சொன்னபொழுது
உலகமே வியப்படைந்து அவரை பாராட்டியது .

அவர் எழுதிய புத்தகமான தி ஜார்னி ஒப் மேன் என்கிற புத்தகத்தில் தான் இதை எழுதியுள்ளார் ...

இதைதான் குர் ஆன் சொல்கிறது...
மனிதர்களே உங்களை ஒரே ஒருவரில் இருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணைவியைபடைதான் .
அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கி பெருக செய்தான் quran ;4:01
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
அல் குர்ஆன்: 49 ;13

விற்பனை தீவிரவாதிகள்.

No comments:
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக..

வியாபார யுக்தி ...

கடந்த காலம் தொடக்கம் இன்று வரை இவர்கள் காட்டக்கூடிய விளம்பரங்களை நம்பி நாம் கோதுமை, வீட்டில் தயாரிக்கும் சத்துமாவு, குருணை கல் நீக்கிய எழும்பை பலப்படுத்தும் அரிசி கஞ்சி
பார்லி கஞ்சி [ஜவ்வரிசி கஞ்சி]
போன்றவைகளை தவிர்த்து விட்டோம்.

விளம்பரங்களில் நடிக்கும் நபர்கள் ஏன் நடிகர்களாகவோ அல்லது விளையாட்டு வீரர்களாகவோ இருக்கிறார்கள் என்று நாம் என்றாவது யோசித்தது உண்டா?

அதே போன்று இவர்கள் காட்டும் விளம்பரங்களில் இயல்பான மனிதர்கள் இல்லாமல் வெள்ளை நிற பெண்கள் ஏன் என்று நாம் யோசித்தது உண்டா ?
டாலர் ஸ்டாங்கர் ஸார்பர் என்று எத்தனை வருடங்களாக ஏமாற்று வித்தை காட்டி மிரட்டி தங்களது பொருட்களை விக்கிறார்கள்.

ஹார்லிக்ஸ் குடிக்காத பிள்ளை வளராது என்ற கருத்தை அன்றாடம் சம்பாதித்து குடும்பத்தை நடத்தும் நம் தாய் தகப்பனின் மனதில் ஆழமாக வேரூன்றி விளம்பரங்கள் மூலம் இயக்கினார்கள்.
விளைவு வாயை கட்டி வயிற்றை கட்டி சேத்து வைத்து ஹார்லிக்ஸ்
பாட்டில் வாங்க பட்டது.
இதனால் நமக்கும் ஒரு பெருமை
ஹார்லிக்ஸ் குடிப்பவன் மட்டுமே அறிவாளி மற்ற என் நண்பர்கள் எல்லாம் என்னை விட அறிவில் குறைந்தவர்கள் என்று பிஞ்சு மனதில் நெஞ்சை விதித்தார்கள்....
விளைவு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் தொடராக ஆகியது.

தாத்தா காலத்தில் ஆரம்பித்து இன்று பேரனுக்கு பேரன் காலம் வரை டாலர் ஸ்டாங்ர் ஸார்ப்ர் என்று ஏதோ ஒரு வெள்ளை பொடியன் அடிக்கடி
 வந்து கொண்டு தான் இருக்கிறான்....
எத்தனை பேர் இதனால் ஸ்டாங் ஆனார்கள் எத்தனை பேர்
இதனால் ஷார்ப் ஆனார்கள் ??

ஜீ டி நாயுடு அப்துல் கலாம் போன்ற அறிவாளிகள் இதை குடிக்கவில்லையே அப்படியானால் அவர்கள் அறிவாளிகள் இல்லையா ?
விற்பனை தீவிரவாதிகள்..

தம் குடும்ப பரம்பரை வாழ எத்தனை ஏழை எளிய மக்களின் வயிற்றில் வேண்டுமானால் அடிக்கலாம் என்று நினைக்கும்
இந்த கும்பல்கள் தான் கையில் துப்பாக்கி வைத்து மிரட்டும் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்...

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளிள் முக்கியமான ஒன்று இஸ்லாமிய வியாபாரம்
அளவு நிருவையில் மோசடி செய்பவனை பற்றி மிக கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்..

ஒரு முறை முஹம்மது நபி கடைத்தெருவில் போய் கொண்டு இருந்த நேரத்தில் கோதுமை வியாபாரியை சந்திக்கிறார்
கோதுமை மூட்டையில் கையை நுழைத்து மூட்டையில் உள்ள அடி கோதுமையை எடுத்து காட்டி அந்த வியாபாரியிடம் சொன்னார்கள் ஏன் மூட்டையில் உள்ள அடி கோதுமை தண்ணீராக உள்ளது என்று கேட்கிறார்கள்
அதற்கு அந்த வியாபாரி மழை பெய்த காரணமாக கோதுமை தண்ணீராக இருக்கிறது என்று கூறுகிறார்
அதற்கு முஹம்மது நபி விளக்கம் சொல்கிறார்கள்
மழை பெய்தால் முழு கோதுமையும் ஈரப்பதத்துடன் தானே இருக்க வேண்டும்
அல்லது அடியில் உள்ள கோதுமையை மேலே எடுத்து போட்டு மக்களிடம் சொல்லி வியாபாரம் செய்யுங்கள்
அல்லாஹ் வியாபாரத்தில் ஏமாற்றுவதை கண்டிக்கவில்லையா
என்று கேட்கிறார்கள் முஹம்மது நபி...

இந்த ஹார்லிக்ஸ்கள் பூஸ்ட்கள் எத்தனை காலமாக இவர்கள் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்
எனது வெற்றிக்கு காரணம் பூஸ்ட் என்று விளம்பரங்களில் தான் பார்க்க முடிகிறதே தவிர யாராவது அப்படி சொல்வதாக தெரியவில்லையே ...
எத்தனை வருடங்களாக ஏமாற்றுகிறார்கள் .........
இன்னும் எத்தனை வருடங்கள் ஏமாற்றுவார்களோ.
வேதமுடையவரே ஏன் உண்மையை பொய்யுடன் கலக்குகிறீர்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைகிறீர்கள்
குர்ஆன்: 3' 85

இந்த வசனத்தின் படி வியாபாரத்தில் ஒரு பொருளை அது உரிய தரத்துடன் இல்லையெனில்
அதை பற்றி உயர்வாக கூறி அதனை
விற்பனை செய்ய கூடாது..




 
back to top