Thursday 28 January 2016

கற்பழிப்பின் வரலாறுகள் ..

No comments:
கற்பழிப்பின் வரலாறுகள் ..
கொஞ்சம் மூச்சை உள்வாங்கி கொண்டு படியுங்கள்
காரணம் நீங்கள் படிக்க இருக்கும் இந்த செய்தி ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிர் ,,,
1890 களில் சீனாவில் பாக்சர் புரட்சியின் போது மேற்கத்திய நாட்டு படைகள் சீன பெண்களை கற்பழித்தனர் ..

முதலாம் உலக போரில் ஜெர்மானிய வீரர்கள் பெல்ஜியம் நாட்டில் கற்பழிப்பை கட்டாய கடமையாக்கி வைத்து இருந்தனர் .

இரண்டாம் உலக போரில் 2 லட்சம் கொரிய சீனா தைவான் பிலிப்பைன் பெண்கள் ஜப்பான் இராணுவ முகாமில்
வைத்து கற்பழிக்க பட்டனர்..

உலகத்தின் மாபெரும் கற்பழிப்பு என்று சொல்வது 1944 இல் இரண்டாம் உலக போரின் போது சோவியத் படை ஜெர்மன் பெண்கள் மீது நடத்திய கற்பழிப்பு தான் ,
8 வயதில் இருந்து 80 வயதிலான பெண்கள்
சுமார் 20 லட்சம் பெண்கள்
தொடர்ந்து 70 முறை கற்பழிக்க பட்டார்கள்

இதில் இரண்டு லட்சம் பெண்கள் இறந்து போயுள்ளார்கள் ..
பெர்லினில் 1 லட்சம் பெண்கள்
கருகலைப்பு செய்துள்ளனர்

1971 பங்களாதேஷ் சுதந்திர போர் ,1975 லைபீரியா உள்நாட்டு போர் ,1980 இலங்கையில் இந்திய அமைதி நடவடிக்கை, 1992 போஸ்னிய போர் ,1994 ருவாண்டா இன அழிப்பு ,
1996 கொசாவா யுத்தம் ..

இத்தனை போரிலும் பெண்கள் கற்பளிக்கபடாமல் இல்லை
எத்துனை பெண்கள் என்று கணக்கு பண்ணினால்
நிச்சயம் முடியாது
காரணம் கணக்கில் அடங்கா கற்பழிப்புகள் இவைகள்

அமெரிக்காவில் மட்டும் 2 நிமிடத்திற்கு ஒரு பெண் கற்பளிக்கபடுகிறாள்
அமெரிக்காவில் 54% கற்பழிப்புகள் போலீசில் சொல்லபடுவதில்லை
8 ம் நூற்றாண்டில் கூட ஐரோப்பாவில் படையெடுத்த ச்காண்டிநோவியர்கள் பிரிட்டன் அயர்லாந்து பெண்களை கணக்கு வழக்கு இல்லாமல் 
கற்பழித்ததாக வரலாறு உண்டு ,,,


இன்னும் எத்துனையோ டெல்லி மாணவிகள் 
எத்துனையோ பெயர் வராத சகோதரிகள் ...

இதெற்கெல்லாம் ஒரே தீர்வு இஸ்லாம் மட்டுமே ..
கற்பழித்தவனுக்கு மரணதண்டனை கொடுப்பதால் கற்பு திரும்பவா வந்து விட போகிறது என்று பேசி பேசியே இவ்வளவு கற்பழிப்புகளுக்கு உடந்தையாக ஆகிவிட்டார்கள் சிலர்
இதற்கெல்லாம் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நமது பெண்களும் கொஞ்சம் கட்டுகோப்பாக இருக்க வேண்டும் ...
பின்வரும் குர்ஆன் வசனங்களை பாருங்கள்
பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள்
மேற்கொள்ளத் தடை ...
அந்நிய ஆண்களும் பெண்களும் இருபாலரும் இணைந்து சரளமாகப் பழகுவதற்குத் தடை - திருக்குர்ஆன் 24:27, 33: 55
அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை-
திருக்குர்ஆன் 33:32.
வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய காலத்தில் விரைவாகத் திருமணம் -
திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்
மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை
திருக்குர்ஆன் 17:31
வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கொடை (மஹர்) கொடுக்க கட்டளை திருக்குர்ஆன் 4:4, 17:31
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
அல்குர்ஆன் 17:32
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.
அல்குர்ஆன் 24:31
ஆடவர்களை திரும்பிப்பார்க்க வைக்கிற நடையே ஆபத்து என்றால்,அடுத்தவர்களை சுண்டி இழுக்கிற ஆடைகளை
என்ன சொல்வது?
இவ்வளவு அறிவுறைகளையும் சரியாக பின்பற்றவேண்டும் மீறியும் ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்தால் அவனுக்கு மரண தண்டனை தான் தரவேண்டும் என்கிறது இஸ்லாம் .
அதுவும் மற்றவர்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறுகிறது
அப்பொழுதான் அடுத்த வீட்டு பெண்ணை
தொடுவதற்கு யோசிப்பான் ..
அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
அல்குர்ஆன் 24:2

இதெல்லாம் சாத்தியமா என்று பேசுபவர்கள் இதை விட நல்ல யோசனையை கூறி உலகில் உள்ள கற்பழிப்புகளை குறைக்க வழி சொல்லலாம் ...
ஆடை அறிவுரையை பெண்களும்
கடுமையான தண்டனை அறிவுரையை
உலகின் உள்ள நாடுகளும்
பின்பற்றி இருந்தால் மேலே குறிபிட்டுள்ள
அத்துணை சகோதரிகளின்
கற்பு பாதுகாக்க பட்டு இருக்கும் ,,

Wednesday 20 January 2016

எங்களை மன்னித்து விடுங்கள் ..

No comments:
கற்பழித்து கொடூரமான முறையில்  கொள்ளப்பட்ட நிர்பயா சகோதரியின் தாய்
எங்களை மன்னித்து விடுங்கள் ..
உங்களை பற்றி எம் மக்களில் அதிகமானோருக்கு தெரியாது 

உங்கள் பிள்ளைக்கு ஏற்பட்ட கொடூரம் எப்பவோ இந்திய அரசாங்கத்தால் மறக்கடிக்க பட்டு விட்டது ..

ஆனால் 10 மாதம் சுமந்து பிள்ளைக்காக எவ்வளோ மருந்துகள் உட்கொண்டு சிரமங்களை மேற்கொண்டு பெற்ற பிள்ளையை
23 வயது வரை பொத்தி பாதுகாத்து வளர்த்து

ஆன் என்ற அதிகாரம் பிடித்த நாய்களால் உங்கள் மகள் சிதைத்து சாகடிக்க பட்டால் ..
கொடூரமாக பிறப்பு உறுப்பில் இரும்பை குத்தி சிதைக்க பட்டால் ....

அதன் ரணம் ஆறுவதற்குள் குற்றவாளிகள் விடுதலைஎன்ற செய்தி கற்பழித்து இறந்த பின்பும்

இந்திய அரசின் மானக்கேட்ட தீர்ப்பால் 
மறுமுறையும் கற்பழிக்க பட்டுவிட்டால் ...
கடந்த 2013ம் ஆண்டில் இந்தியாவில் பதிவாகியுள்ள மொத்த கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 33,707 
இவர்கள் அவ்வளவும் பேரும்

யாருக்கோ மகள்
யாருக்கோ தங்கை 
யாருக்கோ மனைவி
2013 ஆண்டு 33707 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருந்தது.

அது இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு 37413 ஆக 
அதிகரித்து உள்ளது.
முந்தைய ஆண்டை விட இது 11 சதவீதம் அதிகரித்து 
உள்ளதாம் .

இதில் 524 பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள்
இவ்வளவும் வழக்கு வந்தது மட்டும்.

இன்னும் சொல்லபடாதவைகள் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டவர்கள் ..
தீராத வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை என்று செய்தி தாளில் பொய்யான செய்தியை நம்பிக்கொண்டு இருக்கும் நாம் அதில் 
எத்துனையோ கற்பழிப்பு கேசுகள் அடங்கும் ,,

பிள்ளையின் மானம் காட்க பெற்றோர்கள் 
செய்யும் வழிமுறை இது .....
யாருக்குமே தெரியாமல் அடர்ந்த காட்டில் பிதையுண்ட பிள்ளைகள் கும்மிருட்டில் இரயில் தண்டவாளத்தில் இரண்டாக கிடந்த பிள்ளைகள் கிராம பஞ்சாயத்தால் தீர்பளிக்க பட்ட பிள்ளைகள் .

இவ்வளவும் கணக்கில் வராதவைகள்...

இதற்க்கு தகுந்த தீர்வு காணாமல் நாசாவிற்கு போட்டி 
போட்டு கொண்டு இருகிறது மானகெட்ட மத்திய அரசு

இதற்க்கு என்னதான் தீர்வு??

கற்பளிக்கபட்டவளை நினைக்காமல் கற்பழித்தவனுக்கு உதவி தொகை கொடுத்து ஊக்க படுத்துமே ஒழிய 
நியாயம் அரசின் சார்பில் கிடைக்காது..

ஆனால் நம்மால் முடியும் ஆம்
முதலில் ஆடை ஒழுங்கு வேண்டும் ஆணாகினும் பெண்ணாகிலும் ஆடை கட்டுப்பாடு அவசியம் ...

பாலியல் வக்கிரத்தை உண்டு பண்ணகூடிய விஷயத்தின் பக்கம் போகாமல் நம்மை நாமே தடுத்து கொள்ளல் வேண்டும்

தேவையில்லாமல் குடும்பத்தினர் அல்லாத ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசுவதை தவிர்த்துகொள்ளல் வேண்டும்

இவ்வளவு கட்டுப்பாட்டையும் மீறி ஒரு பெண்ணை 
கற்பழித்தால் மரணதண்டனை தரவேண்டும் ....
இது தான் தீர்வு ..

நான் மேலே சொன்ன அவ்வளவும் குர் ஆன் கூறும் தீர்வு ..

எந்தவித மனசலனமும் இல்லாமல் மேலே கொடுகபட்டுள்ள ஆயிரகணக்கான பெண் பிள்ளைகளின் வாழ்கையை மற்றும் உயிரை பற்றி கொஞ்சம் சிந்தித்தால்
குர்ஆன் கூறும் சட்டம் தான்
சரி என்ற முடிவுக்கு வருவீர்கள் ...

புகைப்படம் :
கற்பழித்து கொடூரமான முறையில் 
கொள்ளப்பட்ட நிர்பயா சகோதரியின் தாய்

Mohamed Shajahan shams deen

இஸ்லாமிய தோட்டகலை ,,,

No comments:

இஸ்லாமிய தோட்டகலை ,,,

பொதுவாக இஸ்லாமியர்களின் வளர்ச்சியை தடுக்க எந்தஎந்த விதத்தில் முடியுமோ அவ்வளவு வேலைகளை செய்து வருகிறார்கள் சில மேற்கத்தியர்கள் ..

அந்த விதத்தில் சுதந்திர போராட்டம் தொடங்கி சுத்தமாக துடைத்து எறியபடுகிறது முஸ்லிம்களின் கண்டுபிடிப்புகளும் வரலாறுகளும் ,


அது போன்று முற்றிலும் மறக்கடிக்க பட்ட ஒன்றுதான் ,
இஸ்லாமிய தோட்ட கலை

தோட்டத்திற்கும் அரபுகளுக்கும் என்ன சம்பந்தம் பாலைவனத்தில் ஏது தோட்டம் என்றெல்லாம் கற்பனை செய்பவர்கள்

தவறவிடும் விஷயம் தான் சவூதி அரேபிய மட்டும் , அரபுகள் வாழும் பிரதேசம் அல்ல .

அல் ஜீரிய வில் தொடங்கி அந்தலூஸ் வரை இஸ்லாமிய நாடாக தான் இருந்தது ,,

அந்தலூஸ் எனபது இன்றைய ஸ்பைன் ...ஆம் ஸ்பெயினை 800 வருடங்கள் ஆட்சி செய்தது முஸ்லிம்கள் தான் ,பின்னாளில் இரண்டாம் அர்பனின் தலைமையில் சிலுவை போர் மூண்டு அத்துணையும் அளிக்க பட்டது ,முஸ்லிம்களின் ஆயிரகணக்கான கையெழுத்து பிரதிகளான நூட்களும் அளிக்க பட்டது..

இந்த தோட்டகலையை

பொறுத்தவரையில் 8 ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் தோட்டக்கலையில் பிரசித்து பெற்றவர்களாக இருந்ததற்கான சான்றுகள் ஏராளம் கிடைத்துள்ளது ,,,

முஹம்மது நபி அவர்கள் கூட தனக்கு சொந்தமான தோட்டத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்தாதக வரலாற்று ஹதீஸ் உண்டு ,,

மற்றொரு முக்கியமான ஹதீஸ் பருவகாலங்களில் மகரந்த சேர்க்கையை [இரு மரங்களையும் இணைத்து பயிரிடுதல்] மரங்களுக்கிடையே செயற்கையாக செய்தார்கள் என்றும் வரலாற்று ரீதியாக பார்க்க முடிகிறது

இது ஒன்று போதும் முஸ்லிம்களுக்கு பயிருடுதலில் உள்ள அறிவு மகரந்த சேர்கை எல்லாம் இந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று

அதே போன்று நம்ம இந்தியாவில் தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹான் மன்னர் கூட இவ்வளவு அழகான நேர்த்தியான தோட்டத்தை தாஜ்மஹால் முன்பு உருவாக்கியுள்ளார் ,,,,,,

இதை உருவாக்க அல்பேனியா என்ற அரபு நாட்டில் இருந்து இஸ்லாமிய குழுவை வரவளைத்ததாக வரலாறு உண்டு ,,

எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தோட்டத்தை அழித்து விடாமல் அதே வேளையில் தண்ணீரை சேமித்து வைப்பது போன்றும் மிக தத்ரூபமாக தாஜ்மஹால் தோட்டம் தயார் செய்ய பட்டுள்ளது .

Dar al-Bahr and the gardens of Beni Hammad Fort, Algeria
Home gardens in Andalusian Spain
The Shalimar gardens ,

இதெல்லாம் இஸ்லாமியரின் தோட்டகலைக்கு சான்றுகள்

அதே போன்று ஒரு மாளிகளை

அருகே நீர் ஓடை

மரங்கள் புல்வெளிகள் இதெல்லாம் இஸ்லாமிய தோட்ட கலையில் தவிர்க்கப்படாத ஒன்று

ஏதோ சம்பந்தம் இருப்பது போல்
இருகிறது அல்லவா ???

ஆம் எல்லாவற்றுக்கும்
ஒரு சம்பந்தம் உண்டு

இஸ்லாமிய தோட்டகலையின்
முன்னோடி யார் தெரியுமா ??

அல் குர்ஆன் தான் 

குர் ஆனின் சூரா அர்ரஹ்மானில் 66 வது வசனத்தை
எடுத்து பாருங்கள் விளங்கும் ..

அதேபோன்று 47 வது அத்யாயம் 15 வது வசனம் தான் அன்றைய இஸ்லாமிய தோட்டகலைக்கு முன்னோடி ...

ஆம் சுவனத்தை பற்றி அல்லாஹ் விவரிப்பதை ஆறுகள் மாளிகைகள் அழகான பச்சை நிற புல்வெளிகள் எல்லாவற்றையும் அப்படியே கற்றுக்கொண்டு உருவாகியுள்ளனர் முஸ்லிம்கள் ...

ஆனால் அல்லாஹ் குர் ஆனில் சொல்ல கூடிய சுவனம் வேறு அதாவது மனிதனின் கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்கள் எந்த கண்ணும் பார்த்திராத காட்சிகள் எந்த மனதும் எண்ணிடாத வசதிகள் என்று முஹம்மது நபி கூறிவிட்டார்கள் .......

ஆனால் இதெற்கெல்லாம் முன்னோடி குரான் தான் . ..

அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இஸ்லாமிய தோட்டகலை

இன்றைக்கு முற்றிலும்
மறக்கடிக்கபட்டுள்ளது..


http://www.cliffordawright.com/caw/food/entries/display.php/topic_id/29/id/53/

https://en.wikipedia.org/wiki/Islamic_garden 

https://en.wikipedia.org/wiki/Arab_Agricultural_Revolution
 
back to top