Sunday 20 March 2016

No comments:
அபுல் கலாம் ஆசாத் ,,,,

அறிந்த பெயர் அறியாத விஷயங்கள் ..

அபுல் கலாம் ஆசாத் என்றதும் இந்தியாவின் ஒரு தலைவர் என்றது மட்டுமே நாம் பரவலாக அறிந்து இருக்கிறோம் ..

ஆனால் இவர் பிறந்தது மக்காவில் ஆம் 1888 இல் மக்காவில் தான் பிறந்தார் இவரது தகப்பனார் முஹம்மது அல் கைருதீன் ஒரு கவிஞர் மற்றும் இமாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்றைய காலத்திலையே எழுதியவர்

அரபு பெண்ணை மணந்ததால் அபுல் கலாம் ஆசாத் மெக்காவில் பிரப்பதாகி விட்டது

இந்தியாவுடைய முதல் கல்வி அமைச்சர் இவர் தான்

இந்தியாவின் பாரத ரத்னா விருது தேர்வு குழுவில்
உறுப்பினரும் இவர் தான்

இவரை பாரத ரத்னா விருதுக்கு அந்த குழு பரிதுரை செய்த பொழுது விருதை வாங்க மறுத்துவிட்டார்

நானே குழுவில் உறுப்பினர் எனக்கே விருது கொடுப்பது சரியல்ல என்று விருதை தவிர்த்துவிட்டார்..

இதனால் 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது

இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரை தான் வைத்துள்ளார்கள் ..

இவரின் உண்மையான பெயர் அபுல் கலாம் முஹையதீன் அஹ்மத்

ஆசாத் என்ற உருது வார்த்தைக்கு விடுதலை என்று பெயர் இந்தியாவிற்கு விடுதலை வேண்டும்

என்ற நோக்கில் தனது பெயருடன் அபுல் கலாம் ஆசாத் என்று இணைத்து கொண்டார்

ஆம் இவர் தவிர்க்க முடியாத சுதந்திர போராட்ட தியாகி

தன்னுடைய எழுத்தால் சுதந்திர
வேட்கையை உணர்த்தியவர்
இவர் எழுதிய

India Wins Freedom என்ற நூல் இன்றுவரை பேசபடுகிறது..

ghubar i khatir என்று உருது மொழியிலும் இந்தியாவின் சுதந்திரம் பற்றி எழுதி பெருவாரியான படித்த மக்களிடம் இந்திய சுதந்திர வேட்கையை உருவாக்கியர

மற்றும்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு சுதந்திர விடுதலைக்காக பாடுபட்டதால்

ravla act என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்து இவரது நூட்களை மீண்டும் பப்ளிஷ் செய்ய விடாமல் தடுத்தது பிரிட்டிஷ் அரசு

இவ்வளவு சிரமங்களும் இவ்வளவு இன்னல்களும் தாண்டி சுதந்திரம் வாங்கி கொடுத்த முஸ்லிம் தியாயிகளை மறந்து விட்டு

,,முஸ்லிம்களாகிய நாங்கள் தீவிரவாதிகள்
அல்ல என்று கோஷம் போட வைத்து விட்டனர் ...

திப்பு சுல்தான் என்றாலே அவன் தேச விரோதி
என்று கான்பிகின்ற்றனர்..

திப்பு சுல்தான் தேச விரோதி என்றால்
அபுல் கலாம் ஆசாத்தும் தேச விரோதி தான்..

அபுல் கலாம் தேச விரோதி என்றால்
அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து

அவருக்கு ஸ்டாம்பு வெளியிட்டுள்ள இந்திய அரசும்

தேச விரோதிகள் தான் ...


No comments:
முஸ்லிம் அல்லாதவரையும்
கண்ணியப்படுத்தும் அல் குர்ஆன்...


பொதுவாக இது போன்ற தலைப்பில்
யாரும் பேசியிருக்க மாட்டார்கள்

இப்படி பேசுவதும் கொஞ்சம் சிரமம் தான் .
இருந்தாலும் உண்மையை சொல்வதில்
எந்த பிரச்னையும் அல்ல ...

திருகுர்ஆனினில் காபிர்கள் என்ற வார்த்தை வருவது உண்மைதான் ,,,

அதனால் காபிர்கள் என்றாலே ஒரு வேறொரு கண்ணோட்டத்தில் பார்கின்றனர் முஸ்லிம் அல்லாத நண்பர்கள் ..

பார்த்தீர்களா எங்களை குர் ஆன் காபிர் என்கிறது என்று வாதம் புரிவதும் உண்டு..

ராமகோபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் எங்களை காபிர் என்று சொல்லி புண்படுத்துகிறது குரான்

ஆகவே தமிழகத்தில் தடை செய்யுங்கள் என்று வழக்கு தொடுத்தது பழனிபாபா அவர்கள் அ
 தை முறியடித்து போன்ற விஷயங்கள் அறிந்தவர்களுக்கு தெரியும் ..


காபிர் என்றால் முஸ்லிம் அல்லாதவரை காபிர் என்று சொல்லப்படும் அவ்வளவே...........
ஹிந்து நண்பர் மட்டும் அல்ல கிருஸ்துவ நண்பரும் குரானின் பார்வையில் காபிர் தான் ,,

இது ஒன்றும் பாரதூரமான விஷயம் அல்ல இப்போது நெருப்பை வணகுபவர்களை மஜூசிகள் என்று குரான் கூறுவது போல முஸ்லிம் இல்லாத மக்களை காபிர் என்கிறது .......


அவ்வளவே அது ஒரு வார்த்தை தான் ....

உணவிற்கு குடிப்பதற்கு இன்னொரு மதத்திற்கு என்று அரபு பெயர் இருப்பது போலதான் காபிர் என்பதும் ...

அதை விடுங்க முனாபிகின் என்று முஸ்லிம்களில் சிலரை குர் ஆன் சொல்லுகிறது முனாபிகிஈன் என்றால்
நயவஞ்சகன் என்று பெயர் ...

சரி காபிர்கள் ஒழிக்கபடவேண்டுமா ??
அவர்கள் முஸ்லிம்களுடன் இணக்கத்துடன்
வாழ வழி இல்லையா ??

காபிர்களை கண்ட இடத்தில கொள்ளுங்கள்
என்று குரான் சொல்லுகிறதே ???


ஆம் இதற்க்கு பதில் தெரிந்து கொள்வது சிறந்தது ....

காபிர்களை அளிக்கவேண்டும் அவர்களுடன் நீங்கள் நட்புடன் வாழ கூடாது என்று குரானோ அல்லது முஹம்மது நபி அவர்களோ சொல்லவே இல்லை......

இது நண்பர்களுக்கு சவால் ...


அப்படி குரான் சொல்லுவதாக நிரூபிக்க முடிந்தால்
நிருபிக்கட்டும் ....


மாறாக குரான் இணக்கத்துடன் வாழவே சொல்லுகிறது .....

குர்ஆனில் மாற்று மதத்தினரை கொள்ளுங்கள் என்று வந்துள்ளது என்றால் குரானை கடை பிடிப்பது எங்களது கடமை ஆகவே 1400 வருடங்களாக முஸ்லிம் அல்லாதவர்களை தேடி பிடித்து கொன்று கொண்டே இருப்பார்கள் முஸ்லிம்கள் ..

இந்நேரம் முஸ்லிம் அல்லாத ஹிந்து மக்களோ கிருத்துவ மக்களோ இந்த உலகத்தில் இருந்து இருக்கவே மாட்டார்கள் ...

அதெல்லாம் இல்லை குர்ஆனில் காபிர்களை கொள்ள சொல்கிறது உண்மை தான்

என்று வாதிடுபவர்கள் இஸ்லாம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நாடான சவுதியில் எத்துனை என் முஸ்லிம் அல்லாத

சகோதர்கள் வேலை செய்கிறார்கள்

அவர்களில் எத்துனை பேரை குரானின் கூற்றுப்படி முஸ்லிம்களான சவூதி வாசிகள் கொன்று குவிதுள்ளர்கள்

என்று கூரவேண்டுமாய் தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்..

அப்படியல்ல ஒரு உயிரை கொன்றவன் முழு சமூகத்தையே கொன்றவன் போலாவான் என்று முஹம்மது நபி சொன்னார்கள்

ஆனால் இதில் காபிர்கள் விதி விளக்கு என்று சொல்லவில்லையே
எல்லாமும் உயிர் என்ற ரீதியில் தான் சொன்னார்கள் ......


உங்கள் அண்டை வீட்டாரிடம் பகைத்து கொள்ள வேண்டாம் ,
அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்ணவேண்டாம் என்று சொன்ன முஹம்மது நபி அவர்கள் காபிராக இருந்தால் பரவாயில்லை கண்டு கொள்ளவேண்டாம்
என்று சொல்லவில்லை .....

முஹம்மது நபியின் பள்ளியில் ஒரு யூதர் இரவில் அவசரமாக வந்து பள்ளியினுள் சிறுநீர் கழித்து கொண்டு இருக்கிறார் இதை கண்ட நபியின் தோழர்கள் அவரை தடுக்க முயல்கின்றனர் .

உடனே முஹம்மது நபி அவர்கள் வேண்டாம் விடுங்கள் அவர் சிறுநீர் கழிக்கும் வரை தொந்தரவு செய்யவேண்டாம் காரணம் சிறுநீர் கழித்து கொண்டு இருக்கும் பொழுது உடனே
நிறுத்துவது வேதனையாகும் என்றார் ,

பிறகு அங்கே மண்ணை அள்ளிபோட்டு மூடிவிட்டு அவரிடம் வந்து இது வணக்கஸ்தலம் இங்கு இனிமேல் சிறுநீர் கழிக்காதீர்கள் என்று பணிவுடன் சொன்னதாக புஹாரி கிதாபில் ஆதாரபூர்வமான ஹதீஸ் பதியப்பட்டுள்ளது ...

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் முஸ்லிம்கள் வாழக்கூடிய பகுதியில் தான் பள்ளிவாசல் இருக்கும் அங்கே ஒருவர் சிறுநீர் கழிக்கிறார் என்றால்
காபிர்கள் [முஸ்லிம் அல்லாத மக்களும்]
நபி அவர்களுடன் வாழ்ந்ததாக தானே தெரிகிறது ,

இன்று சிலர் விஷம பிரசாரம் செய்வது போன்று குர்ஆனில் உள்ள வார்த்தையை கடைபிடித்தால் அவரை கொன்றல்லவா இருக்கவேண்டும் ???

நபிகள் நாயகம் காலத்தில் எத்துனையோ முஸ்லிம் அல்லாத மக்கள் நபியிடம் வந்து தங்களது பிரச்னைகளை முறையிட்டுள்ளனர் என்று வருகிறது .......

இதற்கெல்லாம் மேலாக குர்ஆன்
விஷம பிரசாரம் செய்யும் சில மனிதர்களின் பொட்டில் அறைந்தது போன்று ஒரே ஒரு வசனம் இது தான் ,,,,

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடா தோருக்கும் உங்கள் வீடுகளில் இருந்து உங்களை வெளிஎற்றாதொருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்யவில்லை நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்
அல்குரான் 60'8


இதில் தெளிவாக வருகிறது இதை விட என்னவேண்டும் ....

காபிர்கள் உங்களை பகை உணர்வோடு பார்ப்பதால் அவர்களுக்கு நீதி செலுத்தாமல் இருக்காதீர்கள் என்ற கருத்து பட குர் ஆன் 5;8 இல் மிக தெளிவாக வருகிறது ..

முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம் ஆகிவிடுங்கள் என்று நிர்பந்திக்க தடை 2;256...
மாற்று மத கடவுளை திட்டுவதற்கு
முஸ்லிம்களுக்கு தடை தெரியுமா ?

முஹம்மது நபி அல்ல அல்லாஹ்வே குர்ஆனில் கூறுகிறான்

6;108 வது வசனத்தை எடுத்து பாருங்கள் தெளிவாக புரியும் ...

இன்னும் எவ்வளவோ இருக்கு போர் காலத்தில் சொன்ன வசனத்தை மட்டும் அதுவும் அவர்களை கொள்ளுங்கள் என்று வருகிறது அவர்கள் என்றால் யார் ???

அதை படிக்க மேலேயுள்ள வசனத்தை படித்தால் புரிந்துவிட போகிறது அதையெல்லாம் கொண்டுவந்து உங்களிடம் தந்து இதோ பாருங்கள் ...

எவ்வளவு மூர்கதனமாக குரான் சொல்லுகிறது என்று சொன்ன நண்பர்களுக்கு நான் மேலே சொன்ன
வசனங்கள் தெரியாதா ????

நான் இந்த பதிவை போட காரணம்

இனி கொடுக்க போகும் வசனம் தான்
இந்த வசனத்தில்

நாம் பொதுவாக சொல்லும் மரண சாசனம்
இதயே இஸ்லாமிய சட்டம் வசீயா என்கிறது

ஒரு முஸ்லிம் மனிதர் இறந்த பிறகு தனது பிள்ளைகளுக்கு சொத்து போய் சேரும் தனது பிள்ளைகளுக்கு கொடுத்தது போக வேறு ஒரு மனிதருக்கு அவருக்கு மிகவும் நெருகிங்க அதேவேளையில் சொத்து உரிமை இல்லாதவருக்கு
அவர் கொடுக்க நாடினால் அதை வசீளாவாக
மரண சாசனமாக இரண்டு
பேரிடம் ஏற்கனவே சொல்லி இருக்க வேண்டும் ..


உதாரனத்திற்க்கு எனது கடையில் இருந்து வரும் வாடகையை மட்டும் இன்னாருக்கு கொடுங்கள்

நான் முன்னேற அவர் உதவியாக இருந்தார் இதற்க்கு இன்னாரின் மகன் இன்னார் இன்னாரின் மகன் இன்னார் என்று இரண்டு சாட்சி இருக்க வேண்டும் ......

ஒரு வேலை அந்த இரண்டு சாட்சியுமே முஸ்லிமாக இல்லை இவருக்கு மரணம் நெருங்கி விட்டது அருகே காபிர்கள் [மாற்றுமதத்தினர்] மட்டுமே இருந்தால் அவரிடமும்
அவரின் மரண சாசனத்தை கூறலாம் என்கிறான் அல்லாஹ்..

சுப்ஹானல்லாஹ் ..

எவ்வளவு கண்ணியம் என் மாற்றுமத நண்பர்களுக்கு ,,
படைத்தவனை விட்டு விட்டு படைப்புகளை கடவுளாக ஏற்று கொண்டாலும் ,படைத்தவன் கூறும் வார்த்தை இது ..

அந்த வசனம் இது தான் குர் ஆனில் 5;106 இல் பார்க்கலாம்

முஸ்லிம்கள் ஜகாத் பணத்தை மாற்று மத நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்ற சட்டத்தை அறியாதவர்கள்

ஜிஸ்யா வரியை பற்றி பேசுவது தான் வேதனை ...
இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டது முஸ்லிம் அல்லாதவரால் தான் அதுவும் பள்ளிவாசலின் உள்ளே வைத்து கொன்று விட்டு போனான் ...
பள்ளிவாசல் வரையும் அனுமதித்தது இஸ்லாம் இன்றும் அனுமதிக்கிறது இஸ்லாம் ....
இந்த உலக வாழ்கையை பொறுத்தவரை முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வேறு பாடும் இல்லை ....
மறுமை வாழ்க்கை என்ற ஒரு விஷயத்தில் தான் முஸ்லிம்கள் சிறந்தவர்களாக பாவிகிறது ........
இதுவே போதும் என்று நினைக்கிறன் ....
நண்பர்கள் உங்கள் காதுக்கு வரும் செய்திகளை வாசிக்காமல் கேட்காமல் நேரடியாக அப்படி உள்ளதா குர்ஆனில் என்று பார்த்துவிடலாம் ........
ஒரு சகோதரத்துவ அடிப்படையில் நீங்களும் நாங்களும்

அண்ணன் தம்பிகள் தான் என்பதை உணர்த்தும் வகையில்
இந்த பதிவை பதிந்தேன் ... ..

நமக்கிடையே இறைவன் விஷயத்தில்
கருத்து வேறுபாடுகள் இருந்தால


அழகாக பேச வேண்டுமே தவிர ஆபாசமாக அல்ல ..

இஸ்லாமிய பார்வையில் ஆசிட் வீச்சி...

No comments:
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு 

[அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதுன் உண்டாவதாக]

கேவலம் கேவலம் ....

இந்தியாவில் நூற்றுகணக்கான பெண்கள் முகத்தில் ஆசிட் வீசி தங்களது அழகை இழந்து வாழ்கையை இழந்து கொடூரமான முகத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் ...

எனக்கு ஒரு சந்தேகம் ஏன் ஆசிட் வீச்சில் எல்லாமுமே பெண்களுக்கான கொடுமையாக உள்ளது ஒரு ஆண் கூட ஏன் பாதிக்கப்படவில்லை 

அதே போன்று ஆசிட் வீசி பெண்களின் முகத்தில் மட்டும் குறி பார்த்து வீச படுவதன் நோக்கம் என்ன ???

உடலில் இருந்தாலும் காயம் ஆறியதும் ஆடையை வைத்து மறைத்து கொள்ளலாம் ஆனால் எல்லாரும் பார்க்கும் படி முகத்தில் வீசுவதன் நோக்கம் என்ன ???

என்ன பெருசா புடிங்கிட முடியும் இவனுன்களால் என்ற திமிரை தாண்டி என்ன இருக்க போகிறது ??

எவ்வளவு கொடூரம் இது .

கொதிக்கும் என்னை சிறிது பட்டாலே துடித்துவிடும் சகோதரிகள் முழு முகத்திலும் ஊற்றப்படும் ஆசிட்டின் கொடுமையை எப்படி சமாளிப்பார்கள் ...

இந்த அறிவு கெட்ட மனிதர்களை என்ன செய்வது தனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்க கூடாது என்ற
பொறாமையை தவிர வேறென்ன ???

அன்பும் காதலும் அழகில் மட்டும் அல்ல ....

இவ்வளவு துன்பத்தை தாங்கி அந்த பெண் கடைசிகாலம் வரை திருமணம் செய்யாமலும் தான் கூட படித்த பெண்களின் வாழ்கையை பார்த்து சந்தோசபட்டும் வாழ்கையை கழிக்க வேண்டும் 

ஆசிட் வீசுன இவரு யார்யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டியதை கொடுத்து சரி கட்டி வேறொரு பெண்ணை திருமணம் செய்து அதே ஊரில் ஜாம் ஜாமென்று திருமணமும் நடக்கும் ...

இவளுக்குண்டான நீதி எங்கே ????


யார் தருவது ???

இந்த உலகம் இவளுக்கு தீர்ப்பை தந்து விட்டதா ???

இல்லை இவளுண்டான தீர்ப்பு உண்டு மறக்கவும் படாது

என்று இந்த சம்பவம் நடந்ததோ அன்று இவன் அந்த சகோதரியின் குடும்பத்தார் கைகளில் கிடைத்தால் என்ன நடக்குமோ அதே நிலையில் இவனுக்கு விசாரணை உண்டு ...

இஸ்லாம் இந்த உலகில் உள்ள அரசாங்கத்திற்கு சொல்லுகிறது 

ஒருவன் எப்படி பாதிக்கபட்டனோ அதே நிலையில் அவனது நிலைக்கு காரனமானவனையும் தண்டிக்கவேண்டும் என்கிறது 

ஒருவன் கன்னத்தில் அறைந்தால் அறைந்தவன் கன்னத்தை பாதிக்கபட்டவன் அடிக்கலாம் அரசாங்கம் செய்ய வேண்டும் 

ஒருவன் கண்ணை தோண்டி எடுத்தாள் தோண்டியவனை பிடித்து அதே போன்று அவனது கண்ணையும் தோண்டி எடுக்க வேண்டும் 

இதை அரசாங்கள் தான் செய்ய வேண்டும் ....

இந்த சகோதரியின் மீது ஆசிட்டை ஊத்தியவனை பிடித்து அதே போன்று இவன் மீதும் ஆசிட்டை ஊத்தவேண்டும் ..

இது தான் பாதிகபட்டவனுக்கு மன நிறைவு அவன் நாடினால் 
மன்னிக்கலாம் ....

முகம்மது நபி காலத்தில் ஒரு சிறுமியின் கழுத்தில் கிடத்த
நகைக்காக இரண்டு பாறைக்கும் மத்தியில் அந்த சிறுமியின் தலையை வைத்து நசுக்கி நகையை பறித்து
சென்றான் ஒரு யூதன்

விசாரித்து அவனை கைது செய்து அதே போன்று பாறைக்கு மத்தியில் தலையை நசுக்கி தண்டனை கொடுத்தார்கள் நபிகள் நாயகம் ....

தண்டனை குற்றத்தை குறைக்குமே ஒழிய தூண்டாது அறிவுகெட்ட சிலர் கொடுமையான தண்டனையை விமர்சிகிறார்கள் 

அதுவே பாதிக்கபட்டது தங்களது குடும்ப பெண்கள் என்றால் அவனை தூக்கில் போடாதீர்கள் என்று சொல்ல மனது வருமா ???

தண்டனைகள் கொடுமையானால் தான் குற்றங்கள் குறையும் ...

பாதிக்கப்பட்ட நபர்களை பாருங்கள் நீங்களே சொல்லுவீர்கள் அவன் என் கையில் கிடைத்தால் செத்தான் என்று 

அதை இஸ்லாம் வரையறுத்து சொல்லுகிறது யாரும் சட்டத்தை கையில் எடுக்கவேண்டாம் ..

பாதிக்கபட்டவன் விரும்பினால் மன்னிக்கலாம் அவன் சொன்னால் தண்டனை வழங்கப்படவேண்டும் ...

அது ஆசிட் வீச்சானாலும் சரி ....

ஆமாம் இந்த சகோதரிக்கு இந்த சட்டங்களெல்லாம் ஒன்னும் செய்யவில்லையே இவர்களின் நிலையென்ன ??

அவ்ளோதான் இயற்கையை யாரால் மாற்ற முடியும் என்று பிதற்றுபவர்கள் பிதற்றட்டும் 

ஆனால் இவர்களுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை உண்டு ...

என் நண்பன் சொல்வது போன்று இந்த உலகில் எல்லாவற்றுக்கும் சம நீதி கிடைகிறது என்று சொல்லுபவர்கள் மறுமை நாளை
நம்பாமல் இருக்கட்டும் .....

அல் ஜசாரி THE REAL FATHER OF ENGINEERING

No comments:
அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹி வ பரகாதுஹூ

[இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக]

இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் அறிஞர் தமிழில் அதிகம் காணப்படாத அறிஞர்... 

நாம் தலையில் வைத்து கொண்டாடும் விஞ்ஞானிகள் மத்தியில் எல்லாவற்றையும் கண்டு பிடித்து எதுவுமே அறியாமல் மண்ணில் புதையுண்ட மாபெரும் விஞ்ஞானியான
அல் ஜசாரியை பற்றி பார்க்க இருக்கிறோம் ..

கேள்வி பட்டிராத ஒரு சிறந்த அறிஞர்
மற்றும் விஞ்ஞானி, எழுத்தாளர், பொறியாளர்,
இன்னும் சொல்லி கொண்டே போகலாம்

இவரின் முழு பெயர் .

பதியால்-சமான் அபூ அல்-இஸ் இபின் அல்-ரசாஸ் அல்-ஜசாரி"
இவர் வாழ்ந்த காலம்

கி பி 1136–1206,

அல் ஜசாரிஎன்பவர் டார்க் ஏஜ் என்று சொல்ல கூடிய இசுலாமியப் பொற்காலப் பகுதியில் (நடுக்காலம்) வாழ்ந்த ஒரு இசுலாமியப்
பல்துறையறிஞரும்..

கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும்,
கணிதவியலாளரும் ஆவார்.

எந்த எந்த துறையில் இவர் சேவை ஆற்றியிருக்கிறார் என்று பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு இவரது சேவை நீண்டுள்ளது

மனித ரோபாட்டுகளின் தந்தை என்றும்
இவருக்கு புனை பெயர் உண்டு ...

உலகின் முதன் முதலில் மனிகூண்டை கால கணக்கிடும் முறையில் அறிமுக படுதியர் இவரே

சலவை இயந்திரம்

நீர்கை பம்பு தோட்டத்திற்கு தேவையான தண்ணீரை இழுத்து கொண்டு வந்து ஒரு உந்து சக்தி மூலம் அமைத்து தண்ணீர் நீர் கை பம்பை உருவாக்கியது முதல்

இன்றைய வாஷ் பேசின் 

மெழுகு வர்த்தி கெடிகாரம்

என்று நீண்டு கொண்டே செல்கிறது இவரது கண்டுபிடிப்பு ..

இதில் முக்கியமானது தண்ணீர் கெடிகாரம் 
ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை பிரமாண்ட குழாய் வழியாக மேலிலிருந்து சிறுது சிறிதாக விழ செய்து அந்த கோப்பையில்

சில மிதவை தக்கை போன்ற சிறிய பொருளை வைத்து அது தண்ணீர் குறிப்பிட்ட எல்லை வரை வந்ததும் மேலே சென்றதும் சில்வர் கலந்த சப்தம் வர கூடிய குழாயில் இடித்து

கீழ் நோக்கி வந்து வேறொரு சில்வரில்
மோதும் அங்கே ஒரு ஒலி எழும்பும்

இதை தான் இன்றைய ஒருமணிக்கொரு முறை சப்தம் வருவது போன்று கடிகாரங்கள் மணி கூண்டில் இருக்கிறதே

இதற்க்கு முன்னோடி இவர் தான் .

இதை தான் வாட்டர் கிளாக் என்று அழைக்கிறார்கள் .

அதே போன்று the fourth water raising machine ...

என்று சொல்ல கூடிய தானியங்கி வாட்டர்
பம்பு மிகவும் பிரசித்தி பெற்றது ...

இதை எப்படி விளக்குவது என்றால் ஒரு பக்கத்தில் இருக்கும் நீரை மற்றொரு பக்கம் கொண்டு வருவது
அதாவது மனிதர்கள் இல்லாமல்
தானியங்கி மூலம் ..

நினைபதற்க்கு இதெல்லாம் ஒரு கண்டு பிடிப்பா என்று நீங்கள் யோசித்தாலும் இதுவே பல ராட்சச பம்பு போட்டு நீரை உருஞ்சுவதர்க்கும் நீரை சம அளவு படுத்துவதற்கும் முன்னோடியாக இருந்தது ,,,

உதாரனத்திற்க்கு ரைட் சகோதர்களுக்கு போயிங் ரக அதி நவீன ஜெட் விமானங்கள் பற்றி தெரியாது

ஆனால் இதற்க்கு முன்னோடி இவர்கள் தான் எனபது
போன்று தான் இதுவும் ...

இவர் 1206 ஆம் ஆண்டில் எழுதிய

"மதிநுட்ப இயந்திரக் கருவிகளின் அறிவு பற்றிய புத்தகம்"
(The Book of Knowledge of Ingenious Mechanical Devices) 


என்ற நூலை எழுதியமைக்காக உலக புகழ் பெறுகிறார்

இந்நூலில் இவர் 100 எந்திரக் கருவிகள் பற்றியும் அவற்றை எவ்வாறு வடிவமைப்பது பற்றியும் எழுதியுள்ளார்...

மற்றும் இவர் வாழ்ந்த காலத்தில் இவர் ஒரு கண்டு
பிடிப்பை கண்டு பிடித்தார் .

அது இன்றைய உலகின் மணிக்கூண்டு உள்ளதே அதற்கெல்லாம் முன்னோடி இந்த அல் ஜசாரி தான் ..

இவரின் கண்டுபிடிப்புகளின் மூல கூற்றை வைத்து பின்னாளில் பிரமலமான கண்டு பிடிப்புகள் வந்தது குறிபிடத்தக்கது ..

இவரின் நூற்களை ஆராயும் பொருட்டு பல்வேறு ஆவணப்படங்களும் எடுத்துள்ளனர் ..

al jazari ;s machines என்ற பெயரில் எலிபன்ட் கிளாக் போன்றவைகள் ,

ஏன் இவர் மறக்கடிக்க பட்டார் ,,,

இப்பேற்பட்ட அறிஞரை ஒருவர் சொல்லித்தான் தெரியும் அளவிற்கு கொண்டு வந்து விட்டவர்கள் யார் ???

இதற்க்கு பதில் நீங்கள் தான் சொல்லவேண்டும்..
 
back to top