Wednesday 24 June 2015

தேனீ பற்றி குர்ஆன் கூறும் அறிவியல் .

2 comments:

தேனீ பற்றி குர்ஆன் கூறும் அறிவியல் .




பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது.

பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான் அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துள்ளியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம்.

இறுதியாக இந்த வசனத்தில் தேன் என்பதை அல்லாஹ் கூறுகிறான் அதாவது தேன் என்ற மருத்துவ குணம் கொண்ட திரவம் அதிக காலம் கெடாமல் இருக்கும்.

அதே போல மனிதனை நோக்கி இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி என்று கூறுகிறான் அதாவது தேன் அல்லாத மற்ற மருந்துகளுக்கு மருந்தின் தன்மை, கெட்டுப்போகும் காலநிலை, மருந்து கெட்டுப்போனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை சிந்திக்க வேண்டும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மருந்து தயாரிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி கல்வி மிக அவசியம்! இவ்வளவு பானங்களும் கனிவர்கங்களும் இருக்க அல்லாஹ் தேனை மட்டும் சிலாகித்து சொல்வது ஏன் ??
அப்படி என்ன இருக்கு இந்த தேனில்

தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை

சித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம்

புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம்

தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம்.

தேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம்.

தேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம்.

தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம்.

இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம்.

தேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம்.

முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம்.

காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது.

அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கும் இறுதி வேதம் என்பதற்கும் இந்த தேன் மற்றும் தேனீ பற்றிய படிப்பினை ஆதாரமாக இருக்கிறது.

சிந்தித்துப்பாருங்கள் அருமைச் சகோதரர்களே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆராச்சி பற்றிய அறிவு யாருக்கேனும் இருந்ததா? ஆனால் அருள்மறை குர்ஆன் இத்தனை ஆராய்ச்சிகளையும் தேடுங்கள் அந்த தேடுதல் உங்களுடைய நோய்களுக்கு மருந்தாக அமையும் என்று அழகாக வர்ணிக்கிறது நாம் ஆராய்கிறோமா? shams deen
 — 

கூடவே பேசும் மலைகள் குர்ஆன் வசனத்தின் அற்புதம் .

No comments:
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு 


மனித இனம் மட்டுமே 6 அறிவு பொருந்திய உயிர் அந்த மனிதனுக்கு பார்க்கும் திறன் கேட்கும் திறன் பேசும் திறன் .என்று



[சில விலங்குகளை தவிர]

பலவைகயாக அறியபடுகிறது .

ஆனால் நாம் பேசுவதை காற்றில் மிதந்து நமக்கு எதிரொலிக்க சில வேளைகளில் பிரமாண்ட மலைகளும் செய்கின்றன ..

அப்படி சொல்ல கூடிய ஒரு மலையின் வசனத்தை இன்று பார்க்க இருக்கிறோம் .

சில வேளைகளில் நாம் கேள்விபட்டது உண்டு திருப்பி தருகிற சத்தம், இந்த சத்தம் ஒரு பாலைடந்த வீட்டில் போடும் சப்தம் நமக்கு echo வாக வரும். 

அதுகூட சிறிய ரூம் அல்லது சுற்றியும் சுவர் உள்ள பகுதியில் நாம் கத்துவது நமக்கு வேறுவித சப்தத்தில் ஒலிக்கும் .

ஆனால் இன்று நாம் பார்க்கும் வசனத்தில் அப்படி அல்ல ..மலைகள் பேசுவது சம்பந்தமாக ...முதலில் விஷயத்தை பார்த்துவிட்டு வசனத்திற்கு வருவோம் 

கலிபோர்னியாவில் சண்ட் கேப்ரியல் மவுண்டைன் [San Gabriel Mountains]

1896 இல் பனிக்காலம் முடிந்த பின்பு பொது மக்களால் கண்டுபிடிக்க பட்டது தான் இந்த மலையில் உள்ள ஒரு வித்தியாசம் 

இங்கு நாம் குரல் எழுப்பினால் கிட்டத்தட்ட 
8.5 miles (13.7 km) to Echo. கிடைபதாக தகவல் வரவே 

விஞ்ஞானிகள் குழு வந்து இறங்கினர் ஆராய்ந்தனர் ,,

இன்று உலகின் அறிய மலையாகவே இது கருதப்பட்டு சுற்றுலாவிற்காக பல நிபந்தனைகள் அடிப்படையில் மக்கள் பார்வைக்கும் பேசுவதற்கும் அனுமதிக்க படுகின்றனர். 

இதற்காகவே பிரதயேகமாக தயாரிக்க பட்ட மைக்கில் சொல்ல விரும்பும் செய்தியை மக்கள் சொல்கிறார்கள் கூடவே ஒரு குழந்தை போன்று மலைகளில் இருந்து வரும் சப்தம் அனைவரயும் ஆசார்யபட்துகின்ற்றது .

அதேபோன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் வடக்கில் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம் வரை நீண்டுள்ள பேசும் மலைதான் 
Rocky Mountains ராக்கி மவுன்டையின் இதன் அளவு 14,440 அடி (4,401 மீ)

இவ்வளவு பிரமாண்ட மலையிலும் இந்த அதிசயம் நிகழ்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் ..

இன்னும் சில திரைப்படங்களில் கூட மலைகளில் இருந்து வரும் ஓசையை பற்றி சொல்வார்கள் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை .

இப்பொழுது அல்லாஹ்வின் வசனத்தை பாருங்கள் 

34:10. நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பெரும் அருட்பேற்றினை வழங்கியிருந்தோம். (நாம் ஆணையிட்டோம்:) “மலைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள். இவ்வாறே பறவைகளுக்கும் (நாம் கட்டளையிட்டிருந்தோம்.) நாம் அவருக்காக இரும்பை மென்மையாக்கிக் கொடுத்தோம்....

இதில் வரக்கூடிய வார்த்தை மலைகளே அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள் .......

இதிலென்ன ஆச்சர்யம் என்று நினைக்கலாம் நாலு செவதுகுள் வரும் வார்த்தைக்கும் நாலாயிரம் அடி மலையிலிருந்து வரும் வார்த்தைக்கும் சம்பந்தம் நிறையவே இருக்கிறது .

அதே போன்று மற்றுமொரு வசனத்தில் வளர்ந்து வரும் மலைகள் என்றும் குறிபிட்டுள்ளது

[பின்னாளில் பாப்போம் இந்த வசனத்தின் விளக்கத்தை]

அல்குரான் வளர்கிறது என்றால் உயிர் உள்ள பொருளா மலை.

உயிர் இருப்பதால் தான் இதுபோன்ற எதிரொலி கொடுக்க முடிகிறது என்றெல்லாம் விஞ்ஞானம் விளக்கினாலும் 

எந்த விஞ்ஞானியும் பிறக்காதா காலத்தில் இப்படி சொல்லி நம்மளை சிந்திக்க வைக்க படைத்த இறைவனாலையே முடியும் ......

முதல் படம் : மக்கள் பேசுவதற்காக தயாரிக்க பட்ட echo போன் என்று சொல்லகூடிய பேசும் கருவி 


இரண்டாவது படம் :சாண்ட் காப்ரியல் மவுன்டையின் . 

பெருவெடிப்பு கொள்கையும் குர்ஆன் கூறும் இரண்டு வசனங்களும்

1 comment:
இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான்
முந்திய நூல்கள் கூறுகின்றன...

ஏன் இன்றும்கூட பலபேர் உலகம் எவ்வாறு உருவானது என்பதில் குழப்பமாகவும் சந்தேகமாகவும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக தெளிவாக குரான் மட்டுமே கூறுகிறது இதை தெளிவு படுத்த 2 வசனங்கள் போதும் ...

முதலில் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்
என்று பார்போம்.

பெருவெடிப்புதான் இந்த உலகம் உருவாக காரணம் என்று சொல்லகூடிய விஞ்ஞானிகளின் வார்த்தைகளை பாப்போம்

பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாட.

பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது.

ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு,

இந்த பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு பல முந்துக் கோட்பாடுகளும் உண்டு.

கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ சிலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து நெபுலாக்களும் விண்மீன் உருவாகத்துக்கான தூசிகளே. என்றார்

இக்காலத்தில் நெபுலா என்பது [[விண்மீன் பேரடை|விண்மீன் பேரடைகளியே குறிக்கும்)தூரமாக நகர்ந்து செல்கின்றன என்பதை "டோப்லர் பாதிப்பு" என்ற முறையின் மூலம் அறிந்தார்.

ஆனால் இவர் பால் வழியின் உள்ளே உள்ள நெபுலாக்களுக்கு மட்டுமே இதைக் கண்டறிந்தார்.

அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாண்டர் ஃபிரெய்டு மென் அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து ஃபிரெய்டு மென் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார்.

அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.

அதன்பின் கி. பி. 1924ஆம் ஆண்டில் எட்வர்டு ஹபிள் விண்மீன் பேரடைகள் அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன எனக் கூறினார்.

கி. பி. 1927ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் இயற்பியலாளரும் உரோமன் கத்தோலிக பாதிரியாரும் ஆன ஜியார்சசு லெமெட்ரே, ஃபிரெய்டு மென் சமன்பாட்டை தனியாகச் சமன்படுத்தி (முன் செய்தவர் ஜன்சுடீன் கோட்பாட்டில் இருந்து சமன் செய்தார்) விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள அகச்சிவப்பு விலகல்களை கண்டறிந்து அனைத்து விண்மீன் பேரடைகளுமே ஒன்றைவிட்டு ஒன்று விலகுகின்றன
என கண்டறிந்தார்.

விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள நகர்வுகளை ஆராயும் போது விலகல் குறிகள் ஒவ்வொரு விண்மீன் பேரடைகளுக்கும் மாறுபடும் என நினைத்தார்.

அதாவது பால் வழியில் இருந்து கணிக்கும் போது சில விண்மீன் பேரடைகள் பால் வழியை நெருங்கவும் சில விண்மீன் பேரடைகள் பால் வழியை விட்டு விலகவும் செய்யும் என எதிர்பார்த்தார்.

விண்மீன் பேரடைகளுக்கான நகர்வை கணிக்கும் போது அப்பேரடை பால் வழியை நெருங்கினால் வயலட்டு நிறமும் விலகினால் சிவப்பு நிறமும்
ஆய்வுக்கருவியில் வரும்.

ஆனால் இவர் எதிர்பார்ததற்கு மாறாக அனைத்து விண்மீன் பேரடைகளையும் கணிக்கும் போது எல்லாப் பேரடைகளுமே கருவியில்
சிவப்பு நிறத்தையே காட்டின.

[கவனிக்கவும்]

அதனால் கி. பி. 1931ஆம் ஆண்டில் ஜியார்சசு லெமெட்ரே இந்த அண்டமே வீங்குகிறது என்னும் வீக்கக் கோட்பாட்டை முன் வைத்தார்.

இதன் படி அண்டத்தில் ஒவ்வொரு பேரடையும் மற்ற பேரடையை விட்டு விலகுகிறது என்றால் அனைத்தும் ஒன்றாக இருந்த காலமும் இருந்திருக்கும்.

அந்த அனைத்துப் பொருட்களுமே ஒரு சிறு முட்டை போன்ற வடிவில் அடைந்திருக்கும்.

அதுவே ஆதி அண்ட முட்டை எனவும் அதுவே திடீரென வெடித்து பெருவெடிப்புக்கு காரணமானது என முடிவுக்கு வந்தார்.

பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்ட வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 12 தொடக்கம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது.

இன்று நம்மால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது.

[மேலதிக விபரம் அறிய இணையத்தில் காணுங்கள்]

இது விஞ்ஞானிகளின் வாதம்
இதையே நறுகென்று பொட்டில் அதிதது போன்று சொல்ல கூடிய ஒரு வசனம் தான்

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும்இறை நிரகரிபளர்கள் பார்க்கவில்லையா?
(இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?

அல்குர்ஆன் 21:30

இங்கு கவனிக்க படவேண்டிய வார்த்தை

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும்,

இனி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் ..

இரண்டாவது வசனம் பின்னர் வானம் புகையாகைருந்தபோளுது என்று ஆரம்பிக்க கூடிய 41 வசனம் 11 அத்தியாத்தில் வரும் வசனம் ..

இவ்வளவு சக்திவாய்ந்த பேரண்டம் வெடித்து சிதறியதும் பல பில்லியன் வருடத்திற்கு வானத்தில் புகைமூட்டம் மட்டுமே இருந்ததாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்..

இவ்வளவையும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அல்குரான் கூறியிருப்பது அதிசயம் தானே .....
 — 

டாக்டர் மாரிஸ் புகைல் உள்ளதை உலுக்கிய இரண்டு குர்ஆன் வசனம்

No comments:
குர்ஆன் பல மதங்கள் வாழும் காலத்தில் அருளப்பட்டது என்றாலும்கூட அதன் உண்மை தன்மைக்கோ அல்லது அதன் விஞ்ஞான தன்மைக்கோ இழுக்கு ஏற்பட வில்லை டார்க் ஏஜஸ் (உலகத்தில் எந்த கண்டுபிடிப்பும் இல்லாத கருப்பு ஆண்டு)

என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் கூறும் காலத்தில் தான் இஸ்லாமிய விஞ்ஞான வளர்ச்சி மிகவும் அபாரமாக வளர்ந்து வந்தது ...

அவர்கள் அது டார்க் ஏஜ்ங்க அப்போது எந்த கண்டுபிடிப்புக்கும் சாத்தியம் இல்லை என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார் ஆனால் அந்த காலத்தில் முஸ்லீம்கள் கண்டுபிடித்த மூளக்கருவை வைத்து பின்னாளில் பெயர் வாங்கி கொண்டவர்கள் ஏராளம் உதாரனத்திற்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன் 

அப்பாஸ் அல் ஜஹ்ராவி

இவர் தான் விமானத்தின் மூளக்கரு நமக்கு ரைட் சகோதர்களை தெரியும் ஆனால் அப்பாஸ் அல் ஜஹ்ராவி யை தெரியாது. 

இவர் மரண தருவாயில் சொன்ன ஒரே வார்த்தை இந்த உலகில் உள்ள மனிதன் நிச்சயம் ஒரு நாள் வானத்தில் பறப்பான். .

குறிப்பு : இதை பற்றிய வீடியோ முஸ்லீம்கள் என்ன செய்தார்கள் என்ற தலைப்பில் காணொலி தயார் செய்து பதிவேற்றினோம் பார்க்க https://www.youtube.com/watch?v=MdvXpdo7yqU&spfreload=10


ஆக இவ்வளவு விஞ்ஞானத்தை இவர்களுக்கு ஊக்குவிக்க நிச்சயம் ஒரு இறைவாக்கு இறுந்தது அதுதான் அல் குர்ஆன் அந்த வகையில் வரும் இரண்டு வசனங்களை பாருங்கள். 

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

இரண்டாவது வசனம். 

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)

இதைப் பற்றி "The Bible, The Qura'n and Science" என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, The qura'n and Modern Science (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-

Water cycle என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
குர்ஆனில் கூறப்படுகின்ற water cycle பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது. 

நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர்.

உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம். 

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21) 

இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது.

இந்த water cycle கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார்.

16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளாகள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர். 

ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது. 

இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்துள்ளது ....

ஆம் அதனால்தான் இத்தனை தடைகள் இந்த மார்க்கத்திற்கு. ..
Shams Deen
 —

ஈக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள சம்பந்தம் .

No comments:
ஈ பற்றிய இதுவரை கேள்விப்பட்டிடாத 
ஆச்சரியத்துடன் விவரிக்கும் கட்டுரை..கொஞ்சம் பெரிதாக இருந்தாலும்

 ஒவ்வொன்றும்
நம்மை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லும். 

உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி
பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான
உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி
மனிதனை சிந்திக்க தூண்டுகிறான்.

நாம்
அற்பமாக கருதும்
கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற
சிறு உயிர்களை உதாரணமாக
கூறி தன்
வல்லமையை அறிவுறுத்துகிறான்.

அவ்வகையில்
வரும் ஒரு வசனம்தான்,
“மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது.
எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக,
அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள்
பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று
சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது;

இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை
எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை
அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும்
முடியாது; தேடுவோனும்,
தேடப்படுவோனும் பலஹீனர்களே “அல் குர்ஆன் .22:73.

இவ்வசனத்தில் நம்மோடு ஒன்றாய் வாழும் ஈயைப்
பற்றி அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். 

எளிய
உடலமைப்புக் கொண்ட ஈயைப் பற்றிய விபரம் அல்
குர்ஆன் இறங்கிய ஆறாம் நூற்றாண்டு மக்களுக்கு
நிச்சயமாக தெரிய வாய்ப்பில்லை. அது எவ்வாறு
உணவு உட்கொள்கிறது என்பதும் எவருக்கும்
தெரியாது. இந்த ஈக்களில் சுமார் 30,000 வகைகள்
உள்ளன. மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பிருந்தே
65 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே ஈக்கள்
உலகில் நடமாடுகின்றன.

ஒரு ஜோடி இறக்கைகொண்ட ஈயானது
நொடிக்கு 1000 தடவை தன் சிறகை அடிக்கும்
தன்மை கொண்டது. மணிக்கு 5 கி.மீ. பறக்கும்
திறனுடையது. அதன் ஒவ்வொரு கூட்டுக்
கண்களிலும் சுமார் 4000 லென்ஸ்கள் உள்ளன.
தன்னுடைய நுகரும் தன்மையைக்கொண்டே
உணவுகளைத் தேடுகின்றன. ஈக்களுக்கு உணவை
மென்று அரைத்துத் தின்னும் பற்கள் கிடையாது.
ஆகவே ஈயானது திட உணவுப்பொருள்களை
நேரடியாக வாயில் வைத்து மென்று தின்ன
முடியாது.
திரவ நிலையில் உள்ள உணவுகளை தனது வாயில்
உள்ள (உறிஞ்சி) ஸ்பான்ஜ் போன்ற உறுப்பால் ஒற்றி
உருஞ்சிக்கொள்ளும். 

திட உணவாக இருப்பின்
தனது உமிழ்நீரை அப்பொருளில் உமிழ்ந்து
அதைக்கரைத்து நீர்ம நிலையில் உறுஞ்சி
நேரடியாக வயிற்றுக்குள் அனுப்புகிறது. இந்த
அறிவியல் உண்மைகள் எல்லாம் பொருள்களை
பெரிதாக்கிக்காட்டும் மைக்ராஸ்கோப் சுமார்
500 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததன்
பின்னரே அறிய முடிந்தது.
“அவர்களிடமிருந்து ஒரு பொருளை
எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை
அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும்
முடியாது;”
ஈ எவ்வாறு திட உணவுப் பொருள் திரவமாக
மாற்றி எடுத்துக்கொள்கிறது என்பதை இன்றைய
அறிவியல் நமக்கு தெளிவாக விளக்குகிறது. ஈ
ஒரு உணவுப்பொருளில் அமர்ந்து ஒரு வித
(நொதியை) எச்சிலை உமிழ்ந்து
திடப்பொருளை திரவமாக்கி உறுஞ்சி,
நேரடியாக வயிற்றுக்கு அனுப்பி விட்டால் நாம்
அப்பொருளை மீண்டும் கைப்பற்ற முடியாது.

இதைத்தான் அல்லாஹ் ஆயிரத்து நானூறு
வருடங்களுக்கு முன்பு “ஒரு பொருளை
எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை
அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும்
முடியாது;” என்று கூறுகிறான்.

நோயும், மருந்தும் ஈயில் இருக்கு!
ஈயைப்பற்றிய அடுத்த அறிவியல் உண்மையையை நபி
(ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம்
அறிந்து கொள்ளலாம்.

“உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து
விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி
அமிழ்த்தட்டும் பிறகு அதை வெளியில் எடுத்துப்
போட்டு விடவும்; ஏனெனில் ஈயின் இரண்டு
இறக்கைகளில் ஒன்றில் நோயும், மற்றொன்றில்
நிவாரணமும் உள்ளது “-அறிவிப்பவர்:.
அபூஹுரைரா (ரலி). புஹாரி .3320.
பொதுவாக ஈயானது அசிங்கமான,
சுகாதாரக்கேடான இடங்களிலும் கழிவுப்
பொருள்கள் தேங்கும் இடங்களிலும் அதிகம்
இருக்கும். 

கிருமி தாக்குதலுக்குறிய இடங்களில்
வசித்தாலும் அவைகளினால் ஈக்கள் இறப்பதில்லை.
மேலும் ஈயினால் சுமார் 100 வகையான நோய்கள்
(நோய்கிருமிகள்) பரவுவதாக ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.

ஆனாலும் ஈக்களின் உடலிலேயே
அல்லாஹ் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை
வைத்திருப்பதால் அவைகள் பாக்டீரியா, மற்றும்
வைரஸ் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை.

ஆக, ஈயானது நோயை கொண்டு செல்லும் அதே
நேரத்தில் அந்நோய்க்கான பரிகார
நிவாரணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்
வஹியின் மூலம் அன்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
இவ்வுண்மையை இன்றைய நவீன அறிவியல்
ஆய்வுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

அறிவியல் (22, oct.2014) இதழ்களில் ஒரு ஆய்வுச்
செய்தியை வெளியிட்டனர்.

அதாவது ஈயின் மரபணு
முழுவதையும் ஆராய்ந்து பார்த்ததில் மனிதர்களை
நோய் தாக்குவதிலிருந்து காப்பாற்றும் நோய்
எதிர்ப்பு வழிமுறை ஈயின் மரபணுவில் இருப்பதாக
அறிவித்தனர்.

இதுவரை அறியப்பட்டுள்ள மனித நோய்களின்
மரபணுகளில் நான்கில் மூன்று பங்கு மரபணுக்கள்
இந்த ஈயின் மரபணுக்களுடன் ஒத்துள்ளன. 

இந்த ஈக்கள்
ஒவ்வொரு நாள் இரவிலும் உறங்கச் செல்கின்றன;
மயக்க மருந்துக்கு மனிதர்களைப் போலவே
எதிர்வினையாற்றுகின்றன.

அனைத்துக்கும்
மேலாக மிக விரைவாக இனப்பெருக்கம்
செய்கிறது. ஒரு பதினைந்து நாட்களுக்குள்
முற்றிலும் புதியதொரு தலைமுறையை
உருவாக்குகிறது. 

எனவே,
அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம், ஆறு
பெண் ஈக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு
அவைகளின் 15345 ஜீன்களை பிரித்து
வகைப்படுத்தினார். 

இவற்றுள் நோயை பரப்பும்
ஜீன்கள் (விலங்கு நோய்க்கிருமிகள்) மற்றும் நோய்
எதிர்ப்பு ஜீன்களை (நோய் எதிர்ப்பு மண்டலம் &
நச்சு நீக்கம் மரபணுக்களின்) ஆய்வு செய்தனர். 

வீட்டு
ஈயின் குடும்பத்தைச் சார்ந்த பழ ஈ (பழ ஈ) ன் நோய்
எதிர்ப்பு ஜீன்களைக்காட்டிலும் வீட்டு ஈயின் நோய்
எதிர்ப்பு ஜீன்கள் மிக அதிகளவில் இருப்பது
ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

நச்சு என்று சொள்ளப்படும் (சைட்டோகுரோம்
P450 மரபணுக்களின்) ஜீன்கள் பழ ஈயில் 85 மட்டுமே
உள்ளது.

நமது வீட்டு ஈயில் இந்த ஜீன்கள் 146 உள்ளது.
அது மட்டுமல்லாமல் அளவில் ஐந்து மடங்கு
மிகப்பெரியதாகவும் இருந்தது.

ஈயின் நோய்
எதிர்ப்பு ஜீன் மற்றும் விஷமுறிவு ஜீன்களை
தனியாக பிரித்தெடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு
வரக்கூடிய நோய்களை தடுப்பதற்கும் மற்றும்
சுகாதாரக் கேடான இடங்களில் உருவாகும்
கிருமிகளை கட்டுப்படுத்தவும் இவை பெரிதும்
பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் அன்று சொன்னது இன்று
அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு ஈ
உண்ணும் முறையை அதாவது
உணவுப்பொருளை நீர்ம கூழாக்கி நேரடியாக
வயிற்றுக்கு அனுப்பும் செய்தியையும், அதன்
உடலில் நோய் எதிர்ப்பு மற்றும் விஷமுறிவு
நிவாரணியும் உள்ளது என்பதை படைத்த
இறைவனைத் தவிர வேறு எவரும் அறிவிக்க
முடியாது.

“நிச்சயமாக இரவும், பகலும மாறி வருவதிலும்,
வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்
படைத்துள்ள அனைத்திலும் பயபக்தியுள்ள
மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.” -
அல் குர்ஆன் .10: 6.
 

 
back to top