Thursday 25 June 2015

உலகத்தில் இரண்டு கிழக்கு இரண்டு மேற்கு இருக்க சத்தியமா ? அப்படியாயின் குர்ஆன் இதை தானே சொல்கிறது ,

No comments:
குர்ஆன் மனித சமுதாயதிற்கு நேர்வழி காட்டியாகஅருளப்பட்டது என்றாலும் ,

இதுவே இறுதி வேதம் இதற்க்கு பிறகு மனிதனை சீர்திருத்த எந்த வேதமும் வரபோவது இல்லை எந்த தூதரும் வரபோவது இல்லை .

இதை குர்ஆனே திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்த வேதம் மனிதசமுதயதிர்க்கு
ஓர் நற்வழிகாட்டி என்று.

அப்படிஎன்றால் குரான் வழங்கப்பட்ட காலதில் இருந்து நிகழ்காலம் வரை ஏன் இனி வரபோகும் காலம் வரை மக்களை திருப்தி படுத்துகின்ற வேதமாக இருக்க வேண்டும்.

இன்றையகாலம் நவீன யுகம் விஞ்ஞானத்தை நம்பும் காலம் என்பது நமக்கு தெரியும் .

நமக்கு மட்டும் அல்ல நம்மை படைத்த அல்லாஹ்விற்கும் தெரியும் அதனால் தான் ஆங்கங்கே இன்றைய விஞ்ஞானத்தை சொல்லும் விதமாக 1435 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளது அல் குர்ஆன் ..

இன்றைக்கு ரொம்ப சிறிய வசனத்தை பார்க்க இருக்கிறோம் ,சிறிய வசனம் தான் ஆனால் அது சொல்லகூடிய விஞ்ஞானம் நாம் திகைத்துத்தான் நிற்க முடியும் ,,,

இதுதான் அந்த வசனம்

இரு கிழக்குகள், இரு மேற்குகள் அனைத்தின் அதிபதியும் பரிபாலகனும் அவனே! அல் குர்ஆன் 55:17

இதில் வரும் வார்த்தை இரு கிழக்குகள் இரு மேற்க்குகள்

இதுதான் இந்த வசனத்தின் விஞ்ஞானம்

பொதுவாகவே நமக்கு தெரியும் கிழக்கு சூரியன் உதிக்கும் திசை மேற்கு மறையும் திசை என்று ஆனால் இரண்டு கிழக்கு இரண்டு மேற்கு எங்குள்ளது ?

எப்படி ???

நமக்கு தெரியும் பூமி எனபது உருளை வடிவம் எனபது [படத்தில் காண்பது போன்று] உருளை வடிவமாக இருக்குமேயானால் இந்த வசனம் கூறுவது தான் சரி புரியவில்லையா ?

உதாரனதிர்க்கு இப்படி யோசியுங்கள் .நீங்கள் உறக்கத்தில் இருந்து காலை எழுந்துஇருக்கீர்கள் அப்பொழுது உங்களுக்கு சூரியன் கிழக்கில் இருந்து உதித்து கொண்டு இருக்கும் சரியா ,

அதே நிமிடம் அமெரிக்காவில் உங்கள் நண்பரருக்கு தொலைபேசியில் அழைத்து பேசும்போது அங்கு சூரியன் அவர்களுக்கு மேற்கில் மறைந்துகொண்டு இருக்கும் .

உங்களுக்கு அன்றைய தினமே மேற்கில் சூரியன் மறையும் .....

இப்பொழுது எத்துனை மேற்கு இருக்கிறது...

சிம்பிலகா யோசித்து பாருங்கள் இதன் உள்அர்த்தம் விளங்கும்.

உங்களுக்கு கிழக்கு திசை அவர்களுக்கும் கிழக்கு திசை இருக்கிறது உங்களுக்கு மேற்கு திசை அவர்களுக்கும் மேற்கு திசை இருக்கிறது .

இதை தான் 2 அல்லது 3 நூற்றாண்டுக்கு முன்னர் வந்த கலீலியோ சொன்னார் அவருக்கு மரணதண்டனை விதித்தது அன்றைய கிறிஸ்து சபை காரணம் பைபிள் பூமி தட்டை வடிவம் என்று சொல்கிறது ...

வேதத்திற்கு மாற்றமாக யாரும் தனது அறிவியலை சொல்லகூடாது என்று அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது .

ஆனால் எந்த வித ஆர்ப்பட்டமும் இல்லாமல் அதற்கெல்லாம் முன்னாடியே

ஏறக்குறைய சுமார் கி பி 560 களில்
படைத்த இறைவனை தவிர வேறு எவரால் சொல்ல முடியும் பூமி உருண்டை என்று ...

رَبُّ الْمَشْرِقَيْنِ وَ رَبُّ الْمَغْرِبَيْنِ‌ۚ

இரு கிழக்குகள், இரு மேற்குகள் அனைத்தின்
அதிபதியும் பரிபாலகனும் அவனே!

அல் குர்ஆன் 55:17.

Shams Deen
  
 
back to top