Tuesday 29 March 2016

தோற்க்கடிக்கப்பட்ட பரிணாம வளர்ச்சி ......

தோற்க்கடிக்கப்பட்ட பரிணாம வளர்ச்சி ......

பரிணாமவியல் கோட்பாட்டை முதலில் வைத்தது டார்வின்
உலகத்திலையே நிரூபிக்க படாத விஞ்ஞானத்தை பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றுவரை போதிக்கபடுகிறது என்றால் 
அது இந்த பொய்யான கோட்பாடு தான் ..

டார்வின் கோட்பாட்டை டார்விணிசம் என்று அழைத்தாலும் அது நிரூபிக்க படாத விஞ்ஞானம் தான்.

இதை தமிழில் இயற்கை தேர்வு கொள்கை என்று அழைகிறார்கள்.
டார்வின் கோட்பாடு எனபது என்னதெரியுமா ?

உலகில் மனிதன் முதன் முதலில் மனிதனாக உருவாகவில்லை
ஏற்கனவே ஒரு பிராணியாக இருந்து இன்று பரிணாமம் பெற்று பிரானியில் இருந்து மனிதனாக முன்னேறி இருக்கிறான்எனபது தான்.
அந்த கோட்பாடு ஆமா அந்த மனிதனின்
முன்னோடி பிராணி எது ?
ஆப்பிரிக்கா வகை வாலில்லா குரங்கு ..

இது தான் மனிதனின் முன்னோடி என்று அவர் சொன்னார் .
டார்வின் இந்த உளறலை கொண்டுவந்தாலும்
அதை உயிரோட்டமாக உலகில் பிரசாரம் செய்தது
ஜீன் பேட்டிஸ் லாமார்க் .என்பவர்

இவரின் உளறலில் ஒன்று தான் ஒட்டகச்சிவிங்கி .
உணவிற்காக கழுத்தை நீட்டி நீட்டி அதற்க்கு கழுத்து நீண்டுவிட்டது என்று இந்த ஜீன் குறிபிட்டுள்ளார்

இப்பொழுது இந்த ஜீனோ அல்லது டார்வினோ உயிரோடு இல்லைஎன்றாலும் அவரின் பொய்யான ஆய்வை தூக்கி கொண்டு சிலர் வாதிப்பது வேதனையாக உள்ளது ...

கேட்டால் நீங்கள் முகம்மது என்ற மனிதரை தான் பின்பற்றுகிறீர்கள் உங்களுகென்ற இயற்கையாக[!] உருவான
மூளையை பின்பற்றுங்கள் சிந்தியுங்கள்
என்று நமக்கு அறிவுரை வேறு சொல்லுகிறார்கள்

ஆனால் அந்த நண்பர்கள் மறந்த விஷயம் டார்வின் என்ற மனிதரை தான் இவர்களும் பின்பற்றுகிறார்கள்

அவர் உலகில் சொன்ன பரிணாமவியல் கோட்பாட்டை தானே இவர்களும் வாந்தி எடுக்கிறார்கள் அவர்களுகென்று பிரத்யேகமாக
உதித்த விஷயமா இது ??

ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினமாக பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தவன் தான் மனிதன் என்று சொல்லும் நீங்கள்
ஏற்கனவே இருந்த உயிரினம் என்ன பிராணியாக இருந்தது என்று
சொல்லவில்லையே ஏன் ?

ஒட்டகச்சிவிங்கி உணவுக்காக கழுத்தை நீட்டி நீட்டி அதற்க்கு கழுத்து நீண்டது என்றால்
குதிரைகள் என்ன பாவம் செய்தது ?

அவைகளும் பிராணிகள் தானே
அல்லது ஒட்டகச்சிவிங்கி வாழும் காலத்தில்
குதிரைகள் இல்லையா என்ன ?

அப்படி பார்க்கபோனால் ஒட்டகசிவிங்கியவை விட
குதிரைகள் தான் உலகில் அதிகமாக உள்ளது
ஏன் ஒட்டகச்சிவிங்கிகள் குறைந்தது ?

உங்கள் பார்வையில் உணவிற்காக கழுத்தை நீண்ட ஒட்டகசிவிகிகள்
அதிகமாக இருக்க வேண்டும் குதிரைகள் தான் அது காலபோக்கில் உணவு கிடைக்காமை குறைந்து இருக்கவேண்டும் .

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் குரங்கில் இருந்து வந்ததாக சொல்லப்படும் இவர்கள் இன்று அந்த குரங்குகள் இருகின்றனவே ...
அப்படிஎன்றால் மனித தன்மை முழுமை
அடையவில்லையோ ?

சரி பரிணாம வளர்ச்சி பெற்ற உயிரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது என்றால் குரங்கின் முன்னோடி பிராணி எது சொல்ல முடியுமா ?

அதுகூட பரவாயில்லை மனிதன் இன்னும் பல கோடி ஆண்டு கழித்து என்ன மாதிரி மாறுவான் .
பரிணாமவியல் பரிணாமம் பெற்றுகொண்டே தானே
 இருக்கவேண்டும் அப்படிஎன்றால் மனிதன் என்னவாக மாறுவான்....
இல்லை இது தான் இறுதி என்றால் மனிதன் தான் பரிணாமவியலின் இறுதி முடிவு என்று எதை வைத்து சொல்கிறீர்கள் ?

உயிர் இல்லாத பொருளான மண் பாறைகள் வாயுக்கள் காற்று மழை மற்றும் மின்னல் இவைகளின் விளைவாக தான் இந்த உலகின் முதல் உயிரினம் தோன்றியதாம்
இப்படி பரிணாம பெற்று இன்று மனிதர்களாக இருக்கிறோம் என்கிறார்கள் அப்படியாயின் இன்று உள்ள காற்று மண் மழை எப்பொழுது பரிணாமம் அடையும் ??

இப்படி எவ்வளவோ கேள்விகள் உண்டு டார்வின் கோட்பாட்டை மேடை போட்டு பிரசாரம் செய்யும் நண்பர்கள் இதற்க்கு பதில் சொல்லவேண்டும் ...

அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னதெரியுமா ?
வைஸ்மன் என்ற வரலாற்று ஆய்வாளர் இந்த டார்வின் ,
ஜீன் ஆகியோரின் உளறல்களை எலிகள் மூலம் சோதித்து பார்த்து இது பொய்யென்று நிருபித்த சம்பவம் உண்டு ..

இதை கடுமையாக மறுத்த வரலாற்று அறிஞர்கள் பலர் உண்டு அதில் முக்கியமானவர் ஸ்பென்சர் வேல்ஸ் டார்வின் கொள்கை தவறானது என்று பிரசாரம் செய்தது மட்டுமல்லாது அதை நிரூபிக்கவும் செய்தார்
அவர் தான் பல வருட ஆய்வுக்கு பிறகு கண்டு பிடித்த
உண்மை என்ன தெரியுமா ????

இந்த உலகில் வாழும் அத்துணை மக்களும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் தான் .
உயிரியல் துரையின் விஞ்ஞானியான இவர் சொன்னார் எந்த ஒரு மனிதனின் மரபணுவையும் எடுத்து சோதித்தால் அந்த மரபணுவின் ஆரம்பம் ஆப்பிரிக்கா தாய்க்கும் தந்தைக்கும்
தான் போய் முடியும் என்றார்

மனித குலத்தின் மூதையர்கள் முன்னோடிகள் ஆப்பரிக்க பகுதியில் தான் வாழ்ந்தார்கள் ,அங்குள்ள வறண்ட பாலைவனங்களின் காரணமாகவும் உணவு தேவைக்காகவும் நடக்க ஆரம்பித்த
ஆதி மனிதர்கள் பல்கி பெருகி நாடுவாரியாக வாழ்ந்துள்ளார்கள்.

நாட்கள் செல்ல செல்ல அங்கு உள்ள வானிலை பிரதேசம் அடிப்படையில் ஒவ்வொருவரும் தனித்தன்மை
தாங்கி வேறுபட்டு உள்ளார்கள்
இப்படி உருவானது தான் மனித இனம் ஒரு தாய் தந்தைக்கு ஆப்பிரிக்கா முன்னோர்கள் வழியில் பிறந்தவர்கள் தான் நாம் அனைவரும்
.என்ற கருத்தை உலகில் சொன்னபொழுது
உலகமே வியப்படைந்து அவரை பாராட்டியது .

அவர் எழுதிய புத்தகமான தி ஜார்னி ஒப் மேன் என்கிற புத்தகத்தில் தான் இதை எழுதியுள்ளார் ...

இதைதான் குர் ஆன் சொல்கிறது...
மனிதர்களே உங்களை ஒரே ஒருவரில் இருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணைவியைபடைதான் .
அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கி பெருக செய்தான் quran ;4:01
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
அல் குர்ஆன்: 49 ;13

No comments:

Post a Comment

 
back to top