Wednesday 27 April 2016

Human zoo அமெரிக்காவின் கேவலம்

அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்...

இந்த பதிவு மிகவும் அவசியமானது மற்றும் இதை பகிரங்க படுத்துவதும் அவசியமானது..

அமெரிக்காவை போற்றி புகழ்ந்து பேசும் நம் மக்களுக்கு அமெரிக்காவின் நிறவெறி கொடுமை பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை....

ஆகவே இந்த கொடூரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் பயங்கரமாக வளர்ச்சி அடைந்து கொண்டு இருந்த நேரம் ஒரு உண்மையான நெஞ்சை கிழித்து விடும் ஒரு சம்பவம் நடந்தது

அது தான் human zoo

இந்த கேடுகெட்ட பரிணாம வளர்ச்சி ஆய்வாளர்கள்

அதாவது மனிதன் குரங்கில் இருந்து தான் வந்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு கேவலமான ஈன செயலை செய்தார்கள் வெள்ளையர்கள்

அதாவது ஆப்பிரிக்கா பகுதியில் கோங்கோ எனுமிடத்தில் இருந்து ஓட்டா பெங்கா (படத்தில் இருப்பவர்)

என்று சொல்ல கூடிய ஒரு ஆதிவாசி மனிதரை ஆசை வார்த்தை கூறி ஏறக்குறைய கடத்தி வந்து

நியூயார்க்கில் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்து அங்கே ஏப்ஸ் குரங்குடன் இந்த ஓட்டா பெங்கோவை கம்பிக்குள் அடைத்து வைத்தனர்

இதை செய்தது அமெரிக்காவின் பணக்காரனான சாமுவேல் பிலிப் வார்னர்..

குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்ற பொய்யான வாதத்தை நிரூபிக்க செய்த இந்த செயலால் உலகில் அமெரிக்காவிற்கு பெரிய அளவில் கேவலம் ஏற்பட்டது

இதில் என்ன கேவலம் என்கிறீர்களா ?

இந்த மனிதர் அமெரிக்க வரும்வரை தெரியாது நம்மை வைத்து வேடிக்கை காட்ட போகிறது இந்த நாகரீக உலகம் என்று...

கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட இந்த அப்பாவி மனிதரை மக்கள் பார்வையிட அழைப்பு விட பட்டது

ஒரு நாளைக்கு 40,000 மக்கள் இவரை பார்து சென்றனர்
என்று வரலாற்றை எழுதி வைத்துள்ளது அமெ‌ரி‌க்கா..

சும்மாவே சீண்ட கூடிய வெள்ளையர் இவரையும் மனதை புண்படுத்தும் விதமாக சீண்டினார்கள்

கைகொட்டி சிரிப்பது சிறிய கல்லை தூக்கி எறிந்து விளையாடுவது

குழைந்தைகள் எச்சில் துப்பி விளையாடுவது போன்ற மிக மிக கேவலமான இழி செயலை செய்தனர் அமெரிக்கா மக்கள்.

இந்த கொடுமையை 6 வருடம் அனுபவித்த ஒடா பேங்கா  1916 இல் தனது நெஞ்சில் துப்பாக்கியை வைத்து  தானே சுட்டு தற்கொலை
செய்து கொண்டார்...

இறுதிவரை இவரது மனதை யாருமே புரிந்து கொள்ளவில்லை...

இந்த கேவலமான செயலுக்காக  அமெரிக்காவை உலகமே உமிழ்நதது....

அவர் தற்கொலை செய்யும் போது அவரது வயது 32....

இஸ்லாம் என்றோ சொல்லிவிட்டது மனிதனில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது என்று

நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும் எவறாக இருந்தாலும் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி படிக்காமல் போக முடியாது

கருப்பான பிலால் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூடவே இருந்துள்ளார்கள்

இவர் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதல் முறையாக அதான் . அல்லது பாங்கு (தொழுகை அழைப்பு) முறையை முதன் முதலாக சொன்னவர்

மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்கள் பிலால் ரலியல்லாஹு அவர்களின் ஹதீஸை தனிமை படித்தி தொகுப்பார்கள்.

காரணம் அறிவிப்பாளர் வரிசையில் பிலால் அவர்கள் நேரடியாக முஹம்மது நபி அவர்களிடம் கேட்ட ஹதீஸ் தனியாக இருக்கும்

இன்று வரை இஸ்லாமிய அறிஞர்களின் ஸஹாபாக்கள்  என்று சொல்ல கூடிய நபித்தோழர்கள் யாருக்குமே தெரியாத மற்றும் சொல்ல முடியாத ஹதீஸை பிலால் ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் மட்டுமே சொல்ல முடியும்
என்ற நிலையை உருவாக்கினார்கள் முஹம்மது நபி

இஸ்லாமிய உலகில் முதல் கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அவராக இருக்கட்டும்

ஏன் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவராகவே இருக்கட்டும்

இவர்களுக்கு தெரியாத விஷயம் பிலால் ரலியல்லாஹு
அவர்களுக்கு மட்டுமே தெரியும்

இப்போது ஒரு கேள்வி??

உலக முஸ்லிம்கள் உலகின் முதல் முறையாக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் கட்டப்பட்ட காபா இறையில்லத்தை நோக்கி தொழைகை செய்வார்கள்

உலகின் எந்த திசையில் இருந்தாலும் காபா வை முன்னோக்கி தான் தொழுவார்கள்

ஆனால் காபாவின் உள்ளே சென்று தொழ வேண்டும் என்றால் எந்த திசையை நோக்கி
தொழுவது.?

இதான் கேள்வி ..

இதற்கு பதில் தெரிந்து இருக்க கூடிய ஒரே நபர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டுமே..

ஆம் மக்கா வெற்றியின் போது நபி அவர்களுடன் காபாவின் எல்லைக்கே வர தகுதி இல்லை என்று ஒதுக்கி வைக்க பட்ட பிலால் அவர்களை முஹ‌ம்ம‌து நபி அவர்கள் உள்ளே அழைத்து சென்றார்கள்...

இதை இங்கு சொல்ல காரணம் உதடு தடிமனான மிகவு‌ம் கருப்பான தலைமுடி சுருட்டலான பிலால் அவர்களுக்கு

அங்கே உயர் கோத்திரத்தார் என்று இருக்க கூடிய அபூ சுப்யான் ரலி அபூ பக்கர் உமர் உஸ்மான் அலி ரலியல்லாஹு அன்ஹு

இவர்கள் அனைவரையும் விட கீழ்த்தரமானவர் என்று ஒதுக்கி வைத்து இருந்த பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை காபாவின் உள்ளே அழைத்துச் சென்றார்கள் என்றால்

இஸ்லாம் கருப்புஇன வாதத்தை எப்படி முறியடிக்கிறது என்று யோசிக்க வேண்டும்......

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.

(ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்"
அல்குர்ஆன் 49:13

நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள்.

அது,"கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை" என்னும் உலகளாவிய சமத்துவம் தான்....

ஓடா பேங்கா என்று சொல்ல கூடிய அந்த அப்பாவி மனிதனின் கொலைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு உண்டு...

சவூதி போன்ற நாடுகளில் ஆயிரம் தவறுகள் இருப்பினும் கருப்பர் வெள்ளையர் பாகுபாடு கிடையாது ..

இதற்கு எது காரணமாக இருக்கும் ???

இஸ்லாத்தை தவிர வேறு என்ன ?

shams deen

No comments:

Post a Comment

 
back to top